NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    12:12 pm
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக கட்சியினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீதும், கே.பி.அன்பழகன் மீதும் லஞ்சஒழிப்புத்துறை இன்று(மே.,22)குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் 2016-2021ம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் பதவிவகித்தார். அப்போது அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இதன்படி தருமபுரி லஞ்சஒழிப்புத்துறை கே.பி.அன்பழகன், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகள் என 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அன்பழகன் ரூ.45.20 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்த குற்றப்பத்திரிக்கையினை லஞ்சஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை.

    2/2

    10 ஆயிரம் பக்கத்திலான குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

    பின்னர் மீண்டும் கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது தருமபுரி நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையினை லஞ்சஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையினை மேற்கொண்டனர். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79கோடி சொத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையினை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அதிமுக
    தமிழ்நாடு

    அதிமுக

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு  போக்குவரத்து காவல்துறை
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  மத்திய அரசு
    தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து  எடப்பாடி கே பழனிசாமி
    டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு  ஓ.பன்னீர் செல்வம்

    தமிழ்நாடு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்  போராட்டம்
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  பாஜக
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின்  தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023