NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக கட்சியினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீதும், கே.பி.அன்பழகன் மீதும் லஞ்சஒழிப்புத்துறை இன்று(மே.,22)குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளது.

    தமிழ்நாடு மாநிலத்தில் 2016-2021ம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் பதவிவகித்தார்.

    அப்போது அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

    இதன்படி தருமபுரி லஞ்சஒழிப்புத்துறை கே.பி.அன்பழகன், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகள் என 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த விசாரணையில் அன்பழகன் ரூ.45.20 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனினும் இதுகுறித்த குற்றப்பத்திரிக்கையினை லஞ்சஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை.

    லஞ்சம் 

    10 ஆயிரம் பக்கத்திலான குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

    பின்னர் மீண்டும் கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி தற்போது தருமபுரி நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையினை லஞ்சஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது.

    இதனை தொடர்ந்து, அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையினை மேற்கொண்டனர்.

    அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79கோடி சொத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையினை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அதிமுக

    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    அதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம் இந்தியா
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? ஹூண்டாய்
    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா
    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை  சேகர் பாபு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025