NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது
    சுசனா சேத்துக்கு எதிரான 642 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் கலங்குட் போலீசார்

    மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2024
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 39 வயதான சுசனா சேத்திற்கு எதிரான கோவா போலீசாரின் இறுதி குற்றப்பத்திரிகை தற்போது வெளியாகியுள்ளது.

    சுசனா, தனது மகனின் சடலத்தை ஒரு பையில் மறைத்துக்கொண்டு பயணித்தபோது காவல்துறையினரால் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்டார்.

    தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக கோவா காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, கொடூரமான கொலையின் பல திடுக்கிடும் விவரங்களை வெளிப்படுத்துகிறது.

    சுசனா சேத்துக்கு எதிரான 642 பக்க குற்றப்பத்திரிகையை கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர், கலங்குட் போலீசார்.

    அதில் அவர் எப்படி தனது மகனை கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றார் என்பதை விவரிக்கப்பட்டுள்ளது.

    விவரங்கள்

    குற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்

    சுசனா சேத், வழக்கத்திற்கு மாறாக கனமான பையுடன், தனது மகன் இல்லாமல் செக்-அவுட் செய்ததை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்தனர்.

    அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, ​​ரத்தக்கறை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் இருப்பதைக் கண்டு, உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அந்தக் கடிதத்தில், கணவருடனான தனது பகை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச் சோர்வு குறித்து எழுதியிருந்தார்.

    அதனை ஐலைனரைப் பயன்படுத்தி டிஷ்யூ பேப்பரில் எழுதியிருந்தார்.

    அந்தக் குறிப்பின் நம்பகத்தன்மையை கையெழுத்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

    உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, கோவா போலீசார் உடனடியாக அவர் பதிவு செய்த டாக்ஸி டிரைவரை தொடர்பு கொண்டு சுசனா சேத்துடன் பேசினர்.

    கொலை 

    கொலை செய்தது எப்படி?

    மட்கானில் உள்ள ஒரு நண்பரின் இடத்தில் தனது மகனை விட்டுச் சென்றதாகவும், ஹோட்டல் அறையில் இருந்த கறைகள் மாதவிடாய் இரத்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அவர் அவர்களுக்கு போலி முகவரியை வழங்கியதை உணர்ந்த போலீசார், டாக்ஸி டிரைவரிடம் பேசி, அருகில் உள்ள ஐமங்கலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    பிரேத பரிசோதனையில், குழந்தை துணி அல்லது தலையணையால் மூச்சடைக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, குழந்தை அதிர்ச்சி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கழுத்தை நெரிக்கப்பட்டதால் இறந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கோவா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பெங்களூர்

    50,000 டாக்ஸி ஓட்டுநர்களை தங்கள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கும் வியாடாட்ஸ் ஸ்டார்ட்அப்
    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி
    பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம் இந்தியா
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED ஆம் ஆத்மி
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இங்கிலாந்து
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025