NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய தயாராகும் சந்திரயான் 3

    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 14, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான்-3 இன்று விண்ணில் பாய தயாராகி வருகிறது!

    அந்த விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டின் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதை அடுத்து, எரிபொருள் நிரப்பும் பணி நிகழ்ந்து வருகிறது.

    நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் இந்த விண்கலத்தில், ஏற்கனவே அனுப்பப்பட்டு, தோல்வியடைந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட தவறுகள் நீக்கப்பட்டுள்ளன என குறிப்பிடுகிறது இஸ்ரோ.

    தற்போதைய திட்டத்தில், ஆர்பிட்டர் இன்றி லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே அனுப்பப்படவிருக்கிறது. சந்திராயன்-3 விண்கலத்தில் இருக்கும் ப்ரொபல்ஷன் மாடியூலே நிலவில் தரையிறங்கவிருக்கும் லேண்டர் மற்றும் ரோவருக்கு செயற்கைக்கோள் இணைப்பாகவும் பயன்படுத்தப்படவிருக்கிறது.

    இந்நிலையில், விண்கலத்தின் மாதிரியை, திருப்பதி கோவிலுக்கு எடுத்துச்சென்று, வழிபாடு செய்துள்ளனர் இஸ்ரோ குழுவினர். இதனைத்தொடர்ந்து, ராக்கெட்டின் கவுண்ட்டவுன் நேற்று துவங்கியது.

    card 2

    என்னென்ன அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன? 

    லேண்டரில், நிலவின் நிலஅதிர்வை அளவிடும் கருவியுடன் சேர்த்து மொத்தம் நான்கு அறிவியல் உபகரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    அதில், நிலவின் மேற்பரப்பின் வெப்பத்தை அளவிடும் Chandra's Surface Thermophysical Experiment கருவி, நிலவின் இயக்கத்தை அறிந்து கொள்ளும் வகையிலான நாசாவின் LASER Retroreflector Array மற்றும் நிலவின் மேற்பரப்பில் ப்ளாஸ்மாவின் அடர்த்தியை அளவிடும் Langmuir Probe, ஆகிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன.

    லேண்டருடன் அனுப்பப்படும் ரோவரில், Alpha Particle X-ray Spectrometer மற்றும் LASER Induced Breakdown Spectroscope ஆகிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன.

    இவை நிலவின் மேற்பரப்பில் இருக்கும் கற்கள், பாறைகள் மற்றும் மண்துகள்களை ஆராய்ந்து, அவை என்ன விதமான இரசாயனத் துகள்கள் மற்றும் கலவைகளால் ஆகியிருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை விண்வெளி

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 10 தங்கம் வெள்ளி விலை
    பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர்  இலங்கை
    வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய்
    ட்விட்டர் நிறுவனம் செய்த குளறுபடி: கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை இந்திய பகுதியாகக் காட்டியதால் எழுந்த சர்ச்சை  ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025