NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?
    நிமிஷாவின் மரண தண்டனைக்கு ஏமன் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்

    ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 31, 2024
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து வருவதாகவும் கூறினார்.

    கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனைக்கு ஏமன் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் அனுமதித்தது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    MEA இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கைப்படி,"திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் பொருத்தமான விருப்பங்களை ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Our response to media queries regarding the case of Ms. Nimisha Priya:https://t.co/DlviLboqKG pic.twitter.com/tSgBlmitCy

    — Randhir Jaiswal (@MEAIndia) December 31, 2024

    பின்கதை

    என்ன நடந்தது? எதற்காக மரண தண்டனை?

    கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஜூலை 2017இல் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

    சனாவில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் 2020இல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

    அதன் தொடர்ச்சியாக அவரது மேல்முறையீடு 2023 நவம்பர் மாதம் யேமனின் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இருப்பினும், இரத்தப் பணத்தைச் செலுத்த உச்ச நீதிமன்றம் வாய்ப்பளித்தது.

    சட்ட சிக்கல்

    வழக்கறிஞருக்கு பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தொங்கலில் உள்ள விடுதலை

    பாதிக்கப்பட்ட தலால் அப்தோ மெஹ்தியின் குடும்பம் மற்றும் அவர்களின் பழங்குடித் தலைவர் நிமிஷாவை மன்னிப்பதைப் பொறுத்து அவரது விடுதலை உள்ளது.

    பாதிக்கப்பட்ட குடும்பம் அவளை மன்னித்து, அதற்குப் பதிலாக இரத்தப் பணத்தை ஏற்றுக்கொண்டால் அவருடைய மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.

    அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. ஆனால், பிரியா சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அவை முடங்கியது.

    பேச்சுவார்த்தைக்கு முந்தைய கட்டணமாக இரண்டு தவணைகளில் 40,000 அமெரிக்க டாலர்களை வழக்கறிஞர் கோரினார்.

    முழுத் தொகையும் அவருக்குத் தரப்படாவிட்டால் மேற்கொண்டு தொடர மறுத்துவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    கேரளா
    மத்திய அரசு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி மரண தண்டனை

    கேரளா

    கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு இந்தியா
    இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப்  யுகே
    முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அதிமுக
    நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி  இந்தியா

    மத்திய அரசு

    17 ஆயிரம் மோசடி வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மத்திய அரசு வாட்ஸ்அப்
    மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம் மொபைல்
    குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல் நாடாளுமன்றம்
    10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றதாக மத்திய அரசு தகவல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025