Page Loader
ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?
நிமிஷாவின் மரண தண்டனைக்கு ஏமன் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்

ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2024
12:13 pm

செய்தி முன்னோட்டம்

வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து வருவதாகவும் கூறினார். கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனைக்கு ஏமன் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் அனுமதித்தது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. MEA இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கைப்படி,"திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் பொருத்தமான விருப்பங்களை ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பின்கதை

என்ன நடந்தது? எதற்காக மரண தண்டனை?

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஜூலை 2017இல் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். சனாவில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் 2020இல் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அதன் தொடர்ச்சியாக அவரது மேல்முறையீடு 2023 நவம்பர் மாதம் யேமனின் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், இரத்தப் பணத்தைச் செலுத்த உச்ச நீதிமன்றம் வாய்ப்பளித்தது.

சட்ட சிக்கல்

வழக்கறிஞருக்கு பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தொங்கலில் உள்ள விடுதலை

பாதிக்கப்பட்ட தலால் அப்தோ மெஹ்தியின் குடும்பம் மற்றும் அவர்களின் பழங்குடித் தலைவர் நிமிஷாவை மன்னிப்பதைப் பொறுத்து அவரது விடுதலை உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பம் அவளை மன்னித்து, அதற்குப் பதிலாக இரத்தப் பணத்தை ஏற்றுக்கொண்டால் அவருடைய மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. ஆனால், பிரியா சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அவை முடங்கியது. பேச்சுவார்த்தைக்கு முந்தைய கட்டணமாக இரண்டு தவணைகளில் 40,000 அமெரிக்க டாலர்களை வழக்கறிஞர் கோரினார். முழுத் தொகையும் அவருக்குத் தரப்படாவிட்டால் மேற்கொண்டு தொடர மறுத்துவிட்டார்.