NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 
    ஜூலை மாதம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெற இருக்கிறது.

    வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    வலி குறைவான மரண தண்டனையை கண்டறிவதற்கு நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 2) தெரிவித்துள்ளது.

    தூக்கு தண்டனையை விட வலி குறைவாக இருக்கும் மரண தண்டனையை கண்டறிய வேண்டும். எனவே, அதற்கான தகவல்களை சேகரிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், மத்திய அரசு சார்பில் பேசிய, அட்டர்னி ஜெனரல்(AG) ஆர்.வெங்கடரமணி, இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்தார்.

    மேலும், உரிய பதிலைத் தெரிவிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கோரினார்.

    DETAILS

    தூக்கு தண்டனை மனிதாபிமானமற்றது: மனுதாரர் 

    "நான் ஒரு குழுவை உருவாக்க பரிந்துரைத்துள்ளேன். அதற்கு சில பெயர்களைச் சேகரித்து வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ஜூலை மாதம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெற இருக்கிறது.

    மார்ச் 21அன்று, நிபுணர் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    தூக்கு தண்டனையை விட வலி குறைவான மரண தண்டனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.

    2017-ல் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, தூக்கு தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

    தூக்கு தண்டனை "மனிதாபிமானமற்றது" என்றும், "கொடூரமானது" என்றும், குற்றவாளியின் அடிப்படை உரிமையை மீறுகிறது என்றும் அவர் வாதிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது டெல்லி
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  கொரோனா
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் மகாராஷ்டிரா

    உச்ச நீதிமன்றம்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல் இந்தியா
    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்
    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம்
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் இந்தியா

    மத்திய அரசு

    அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு இந்தியா
    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! வாகனம்
    அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 0.70% உயர்வு! சேமிப்பு திட்டங்கள்
    சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்! சேமிப்பு திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025