NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு
    பெரும்பாலான மாநிலங்களில் பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், இந்த ஆப்ஸ்கள் விதிகளை மீறுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) தெரிவித்துள்ளது.

    230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2023
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன நாட்டின் இணைப்புகளைக் கொண்ட 230க்கும் மேற்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.

    உள்துறை அமைச்சகம்(MHA), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன்(MeitY) தொடர்பு கொண்டு, 138 பந்தயம் கட்டும் மற்றும் 94 கடன் வழங்கும் ஆப்ஸ்களை "அவசரகால" அடிப்படையில் தடை செய்வது குறித்து பேசியது.

    அதனால், இந்த ஆப்ஸ்களைத் தடை செய்யும் செயல்முறையை MeitY தொடங்கியுள்ளது.

    2020இல் சீனாவுடனான எல்லைப் பதற்றம் அதிகரித்ததில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை இந்திய அரசு தடை செய்தது.

    முதற்கட்ட தடைகள் ஜூன் 2020இல் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் அதேபோன்ற தடைகள் அறிவிக்கப்பட்டன.

    சீனா

    தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்

    2020இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் மற்றும் 2022இல் நடந்த அருணாச்சலின் தவாங் செக்டார் மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

    ஆறு மாதங்களுக்கு முன், MHAஐப் புகாரளித்தத்தை அடுத்து , கடன்-வழங்கும் 288 சீன ஆப்ஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, ​​Play Store மற்றும் App Storeஇல் இதுபோன்ற 94 ஆப்ஸ்கள் கிடைத்தன.

    இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவது மட்டுமல்லாமல், இந்த ஆப்ஸ்கள் உளவு மற்றும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்படலாம் என்று MHA கூறியுள்ளது.

    இரண்டு அமைச்சகங்களின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த ஆப்ஸ்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால். IT சட்டத்தின் பிரிவு 69இன் கீழ் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    இந்தியா-சீனா மோதல்

    சமீபத்திய

    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி

    இந்தியா

    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் கனடா
    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    அதிகாரியை தரக்குறைவாக பேசிய ஐஏஎஸ்; வைரலான வீடியோ வைரல் செய்தி
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா

    சீனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா
    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா

    இந்தியா-சீனா மோதல்

    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! சீனா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025