
EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
2022-23-ல் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி வகிதத்தை 0.05% உயர்த்தி 8.15%-ஆக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு.
இதுகுறித்த அறிப்பை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தங்களுடன் பகிர்ந்திருப்பதாக அறிவித்திருக்கிறது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு.
2021-22-ல் EPF திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கான வட்டி விகிதத்தை 8.10%-ஆக குறைப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதற்கு முன்னதாக 2020-21-ல் 8.5% வட்டி வகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைந்த வட்டி வகிதமாக இது கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த வகிதத்தை சற்று உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Centre ratified the 8.15 per cent interest rate on deposits under Employees Provident Fund (#EPFO) scheme for 2022-23. pic.twitter.com/dMwLMfwLaw
— IANS (@ians_india) July 24, 2023