இண்டிகோ விமான குழப்பத்திற்கு தற்காலிக தீர்வு வழங்கிய மத்திய அரசு: விமானப் பணியாளர்களின் புதிய விதிமுறைகளை தளர்த்தியது
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக இண்டிகோ விமானச் சேவையில் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பெரும் பயண குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்த குழப்பத்திற்குக் காரணமான விமான பணியாளர்களின் புதிய கடமை நேர விதிமுறைகளை (Flight Duty Time Limitations - FDTL norms) மத்திய அரசு தற்போது பகுதியளவு திரும்பப் பெற்றுள்ளது. விமானிகளின் இரவு நேர பணிக்கான நேர வரம்புகள் உள்ளிட்ட புதிய FDTL விதிமுறைகளின் இரண்டாம் கட்ட அமலாக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்களே இண்டிகோ குழப்பத்திற்குக் காரணம் என விமான நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, விமான நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு இந்த விதிமுறைகளில் தற்காலிகத் தளர்வுகளை அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
DGCA DG Faiz Ahmed Kidwai requests for cooperation from All Pilot Associations and Pilots amid ongoing air travel disruptions. pic.twitter.com/jLSUkOYe2X
— ANI (@ANI) December 5, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
DGCA withdraws instructions to all operators regarding Weekly Rest for crew members.
— ANI (@ANI) December 5, 2025
"...In view of the ongoing operational disruptions and representations received from various airlines regarding the need to ensure continuity and stability of operations...the instruction… pic.twitter.com/uJXxs6Sxqy
நோக்கம்
தொடர் குழப்பத்தினை தீர்க்கவும், விமான போக்குவரத்தை சீராக்கவும் மத்திய அரசு கோரிக்கை
தொடர் குழப்பத்தினை தீர்க்கவும், விமான போக்குவரத்தை சீராக்கவும் மத்திய அரசு கோரிக்கை இந்தத் தளர்வின் முக்கிய நோக்கம், விமான நிறுவனங்கள் உடனடியாக தங்கள் விமானப் பணியாளர்களை நிர்வகித்து, ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளை மீட்டெடுத்து, விமான நிலையங்களில் நிலவும் கூட்ட நெரிசலைச் சீரமைக்க உதவுவதாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக, இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று DGCA-விடம் அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வாய்ப்புள்ளது. விமானப் போக்குவரத்து சூழலை சீராக்கி, பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான ஒழுங்குமுறை ஆணையம், விமானிகளின் ஆதரவு மிக முக்கியமானது என்றும், அவர்ளின் முழு ஒத்துழைப்பையும் கோரி வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளது.