NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    02:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

    இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் நிவாரண அறிக்கைகளை அண்மையில் அறிவித்தார்.

    அதுமட்டுமில்லாமல் மழையால் பாதிப்படைந்த அறுவடை செய்யப்பட்ட நெற்களை நேரடி கொள்முதல் செய்திடும்போது விவசாயிகள் நலன்கருதி, 22சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரியதளர்வுகளை வழங்க பிரதமர் மோடிக்கும் கோரிக்கை கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய மத்தியஅரசு ஆய்வுக்குழுவினை தமிழகத்திற்கு அனுப்பிவைத்தது.

    நேற்று மூன்றுபேர் கொண்ட இந்த மத்திய ஆய்வுக்குழுவினர் முதற்கட்டமாக நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யத்தில் தலைஞாயிறு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுபணியினை மேற்கொண்டனர்.

    நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்த அவர்கள், நெல் மாதிரிகளையும் ஆய்வுக்கு எடுத்துகொண்டனர்.

    மனு அளித்தனர்

    அழுகிய நெற்பயிர்களை கையில் கொண்டு மத்திய ஆய்வு குழுவிடம் அளித்த விவசாயிகள்

    அப்போது அங்கு திரண்ட விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை கையில் கொண்டுவந்து மத்திய குழுவிடம் கொடுத்தனர்.

    அவர்கள் அதனை புகைப்படம் எடுத்துகொண்டதோடு, ஆய்வுக்கான மாதிரியையும் வாங்கிகொண்டனர்.

    இதனைதொடர்ந்து விவசாயிகள் ஓர் மனுவையும் அவர்களிடம் அளித்தனர்.

    அதில், தற்போது 19சதவிகிதம் வரையிலான நெல்கொள்முதல் செய்யப்படுகிறது.

    மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ள நிலையில் 22சதவிகிதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000மூட்டை கொள்முதலை அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இதனை வாங்கிக்கொண்ட மத்திய ஆய்வுகுழு, மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    வரும் 13ம் தேதி மத்திய அரசிடம் இவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்கள். அதன்பின்னரே, நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மத்திய அரசு

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025