NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய மத்திய அரசின் புதிய சேவை

    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 15, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.

    இந்தப் புதிய சேவையை அடுத்த இரண்டு நாட்களில் மத்திய அரசு வெளியிடலாம் என மத்திய தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    மத்திய தொலைதொடர்பு துறையின் கீழ் இயங்கி வரும் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு அமைப்பே இந்தப் புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது. இந்தப் புதிய சேவையை நடப்பு காலாண்டிற்குள் மத்திய அரசு வெளியிடும் எனத் தெரிவித்திருக்கிறார் இந்த அமைப்பின் தலைவரும், சிஇஓ-வுமான ராஜ்குமார் உபத்யாய்.

    பயன்படுத்திய மொபைல்போன்களை வாங்குபவர்களும், இந்த சேவையின் மூலம் தாங்கள் வாங்கும் மொபைல்போன் திருடப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.

    தொழில்நுட்பம்

    CEIR சேவை: 

    Central Equipment Identity Register (CEIR) எனப்படும் இந்த சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.

    ஆனால், CEIR வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கக்கூடிய தகவல்களின்படி இந்தியாவின் சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த வசதி செயல்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மேலும், சில மாநிலங்களில் மட்டும் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    அத்தளத்தில் உள்ள தகவலின்படி தமிழகத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதியில் இருந்தே இந்த சேவை பயன்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மார்ச் 15 மற்றும் அதற்கு பிறகு தொலைந்த மொபைல் போன்களை இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்த கண்டறியவோ அல்லது தடுக்கவோ முடியும்.

    மத்திய அரசின் இந்தப் புதிய சேவை வளைத்தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    மொபைல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மத்திய அரசு

    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு பிரதமர் மோடி
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன? தமிழ்நாடு

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025