NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
    இந்தியா

    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 15, 2023 | 11:05 am 1 நிமிட வாசிப்பு
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய மத்திய அரசின் புதிய சேவை

    தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு. இந்தப் புதிய சேவையை அடுத்த இரண்டு நாட்களில் மத்திய அரசு வெளியிடலாம் என மத்திய தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மத்திய தொலைதொடர்பு துறையின் கீழ் இயங்கி வரும் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு அமைப்பே இந்தப் புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது. இந்தப் புதிய சேவையை நடப்பு காலாண்டிற்குள் மத்திய அரசு வெளியிடும் எனத் தெரிவித்திருக்கிறார் இந்த அமைப்பின் தலைவரும், சிஇஓ-வுமான ராஜ்குமார் உபத்யாய். பயன்படுத்திய மொபைல்போன்களை வாங்குபவர்களும், இந்த சேவையின் மூலம் தாங்கள் வாங்கும் மொபைல்போன் திருடப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.

    CEIR சேவை: 

    Central Equipment Identity Register (CEIR) எனப்படும் இந்த சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு. ஆனால், CEIR வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கக்கூடிய தகவல்களின்படி இந்தியாவின் சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த வசதி செயல்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், சில மாநிலங்களில் மட்டும் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்தளத்தில் உள்ள தகவலின்படி தமிழகத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதியில் இருந்தே இந்த சேவை பயன்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மார்ச் 15 மற்றும் அதற்கு பிறகு தொலைந்த மொபைல் போன்களை இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்த கண்டறியவோ அல்லது தடுக்கவோ முடியும். மத்திய அரசின் இந்தப் புதிய சேவை வளைத்தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    மொபைல்

    மத்திய அரசு

    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மும்பை
    டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  இந்தியா
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  ராஜஸ்தான்
    அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு! ஸ்மார்ட்போன்

    மொபைல்

    போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI  ஏர்டெல்
    அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்!  ஏர்டெல்
    எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ!  மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!  மொபைல் ரிவ்யூ
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023