NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு
    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு

    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 12, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பிரச்சாரம் ஒன்றை 2021ம் ஆண்டு தொடங்கியது மத்திய அரசு.

    இந்த சிறப்புப் பிரச்சாரத்தின் கீழ், அரசு அலுவலகங்களில் சேதமடைந்த பொருட்கள் மற்றும் பயன்படுத்த முடியாது வாகனங்கள் உள்ளிட்டவற்றை களையெடுத்து விற்பனை செய்யத் தொடங்கியது மத்திய அரசு.

    ஆச்சரியப்படும் வகையில், இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு சுமார் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2021 அக்டோபரில் முதல் முறையாக இத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது மத்திய அரசு. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தேவையற்ற 31 லட்சம் அரசு ஆவணங்கள் களையப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு

    சிறப்புப் பிரச்சாரம் 3.0: 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு சிறப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாவது சிறப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது மத்திய அரசு.

    இந்த சிறப்புப் பிரச்சாரத்தின் மூலம் ரூ.400 கோடி வருவாய் ஈட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது போன்று தேவையற்ற பொருட்களைக் களைவது அரசு அலுவலகங்களில் தற்போது மாதாந்திர நடவடிக்கையாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

    கூடுதல் வருவாய் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களில் பெரும்பகுதி இடத்தை தேவையற்ற பொருட்கள் ஆக்கிரமித்திருந்ததால், அரசு அலுவலக செயல்பாடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் கூடுதல் இடமும் கிடைத்திருக்கிறது.

    இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 1.01 லட்சம் அரசு அலுவலகங்களில், 185 லட்சம் சதுரடிகள் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தேவையற்ற பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மத்திய அரசு

    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல் ஆப்பிரிக்கா
    கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு வருமான வரி விதிகள்
    இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்  இந்தியா
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  பெட்ரோல்

    இந்தியா

    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை பாரத்
    "பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா? ஜி20 மாநாடு
    ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025