Page Loader
2026 முதல் இரண்டு முறை 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்
இரண்டு முறை 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்

2026 முதல் இரண்டு முறை 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2025
08:28 am

செய்தி முன்னோட்டம்

2026 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதற்கான விதிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அங்கீகரித்துள்ளது. முதல் பொதுத் தேர்வு பிப்ரவரியிலும், இரண்டாவது தேர்வு மே மாதத்திலும் நடைபெறும். முதல் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்திலும் அறிவிக்கப்படும். கல்வி செமஸ்டரில், உள் மதிப்பீடு(Internal Assessment) ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

தேர்வு அமைப்பு

முதல் தேர்வு கட்டாயம், முன்னேற்றத்திற்கு 2வது தேர்வு எழுதலாம்

பிப்ரவரியில் முதல் கட்டத் தேர்வை மாணவர்கள் எழுதுவது கட்டாயம் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ஆனால் இரண்டாவது தேர்வு விருப்பத்தேர்வாகும், மேலும் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்புவோர் அல்லது மூன்று பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் இதை எழுதலாம். விளையாட்டு வீரர்கள், குளிர்காலப் பள்ளி மாணவர்கள் மற்றும் CWSN வேட்பாளர்கள் தேவைப்பட்டால் இரண்டாவது தேர்வை தங்கள் முக்கிய முயற்சியாக எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொள்கை தாக்கம்

இந்த மாற்றம் NEP 2020 உடன் ஒத்துப்போகிறது

இந்தப் புதிய கொள்கை, public exam-களின் மீதான "அதிக அழுத்தத்தை" குறைப்பதையும், மாணவர்கள் ஒரு வருடம் முழுவதும் காத்திருக்காமல் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் ஒத்துப்போகிறது. இது நெகிழ்வான மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற மதிப்பீடுகளை ஆதரிக்கிறது. பொதுத் தேர்வுகளை மிகவும் சமமாகவும் மாணவர்களை மையமாகவும் மாற்றுவதன் மூலம் இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால மாற்றங்கள்

12 ஆம் வகுப்புக்கும் இதே போன்ற முறையை CBSE பரிசீலிக்ககூடும்

பிப்ரவரியில் CBSE வரைவு விதிமுறைகளை அறிவித்தது, அவை பங்குதாரர்களின் கருத்துக்களுக்காக பொது களத்தில் வெளியிடப்பட்டன. Modular exams மற்றும் objective-descriptive கலவைகள் உள்ளிட்ட எதிர்கால மாற்றங்களையும் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் 12 ஆம் வகுப்புக்கும் இதேபோன்ற இரண்டு தேர்வு முறை பரிசீலிக்கப்படலாம் என்று CBSE சுட்டிக்காட்டியுள்ளது.