NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு
    காவிரி நீர் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்த கர்நாடக அரசு

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவைகளில் தமிழகம் முறையிட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    ஆனால் தங்கள் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நாசமாகி விடும் அபாயம் உள்ளதால் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்த கோரி நேற்று(செப்.,19)டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனு 

    டெல்லியில் ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா 

    இந்நிலையில் இந்த காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இதில் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை தடை செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் கேட்கையில் தங்களால் முடிந்த அளவு 2000ல் இருந்து 10,000 கனஅடி நீர் வரை திறந்ததாகவும்,

    தற்போது தங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் தேவைப்படுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கர்நாடகா
    உச்ச நீதிமன்றம்
    சித்தராமையா

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    தமிழ்நாடு

    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை மு.க ஸ்டாலின்
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் கர்நாடகா

    கர்நாடகா

    கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி இந்தியா
    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு காங்கிரஸ்
    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  காங்கிரஸ்

    உச்ச நீதிமன்றம்

    மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்  மணிப்பூர்
    ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு  ராகுல் காந்தி
    ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம்  தொல்லியல் துறை

    சித்தராமையா

     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025