NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Sep 29, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

    இதனையடுத்து வினாடிக்கு 5000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று கூறி காவிரி மேலாண்மை உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்தது.

    அதன்படி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை உடனே அமல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் மழை இல்லை. அதனால் தண்ணீர் இருப்பு இல்லை என்றுக்கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    உத்தரவு 

    டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம்

    இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் செப்.,28.,முதல் அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இது மேலும் கர்நாடகாவில் நிலவிய நிலைமையை மோசமடைய செய்தது.

    மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இத்தகைய சூழலில் இன்று(செப்.,29)டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தின் பொழுது தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இக்கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி வரும் அக்டோபர் 15ம் தேதி வரை 3,000 கன அடி காவிரி நீரினை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவிரி
    கர்நாடகா
    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  சினிமா
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு தமிழ்நாடு

    கர்நாடகா

    அதிர்ச்சி : 24 வயதில் தேசிய கைப்பந்து வீராங்கனை மாரடைப்பால் மரணம்! கைப்பந்து
    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்? பெங்களூர்
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா

    தமிழ்நாடு

    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    5 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    உச்ச நீதிமன்றம்

    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மணிப்பூர்
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்
    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை ஜம்மு காஷ்மீர்
    ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம்  ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025