Page Loader
காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

எழுதியவர் Nivetha P
Sep 29, 2023
06:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. இதனையடுத்து வினாடிக்கு 5000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று கூறி காவிரி மேலாண்மை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்தது. அதன்படி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை உடனே அமல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் மழை இல்லை. அதனால் தண்ணீர் இருப்பு இல்லை என்றுக்கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

உத்தரவு 

டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம்

இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் செப்.,28.,முதல் அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இது மேலும் கர்நாடகாவில் நிலவிய நிலைமையை மோசமடைய செய்தது. மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இன்று(செப்.,29)டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் பொழுது தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இக்கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி வரும் அக்டோபர் 15ம் தேதி வரை 3,000 கன அடி காவிரி நீரினை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.