NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை
    இந்தியா

    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை

    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை
    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023, 08:13 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை

    சென்னையில் சாலையோரம் இயங்கிவரும் சில பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறியினை கலந்து விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாரிமுனை பகுதியிலுள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த பூனைகள் கழுத்தில் மணிகளை கட்டப்பட்டிருந்தனர். இதனைபார்த்த அதிகாரிகள் வீட்டில் வளர்க்கப்படும் பூனையை திருடிக்கொண்டு வந்திருக்கலாம் என்று சந்தேகித்து 11 பூனைகளை ஏழுகிணறு போலீசார் உதவியுடன் மீட்டுகொண்டு சென்றுள்ளார்கள். மீட்கப்பட்ட 11 பூனைகளும் திருவள்ளூர் மாவட்டம் அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீ ராணியிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து விற்பனை

    இதுகுறித்து ஸ்ரீ ராணி கூறுகையில், தான் ஒரு மத்தியஅரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் பல பகுதிகளில் நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஓர் பூனையை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிட்டியது. இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமில்லாமல் மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சென்னை
    தமிழ்நாடு செய்தி

    சென்னை

    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?  திரையரங்குகள்

    தமிழ்நாடு செய்தி

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம் தமிழ்நாடு
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  பள்ளி மாணவர்கள்
    சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து திண்டுக்கல்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023