NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை
    ‘வாய்ஸ் ஆஃப் கொரசான்’ பத்திரிகை மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2023
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை அருகே உள்ள ஒரு கோவில் இருக்கும் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 11 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறி இருந்தது.

    இந்த தகவலை அந்த அமைப்பிற்கு ஆதரவான 'வாய்ஸ் ஆஃப் கொரசான்' பத்திரிகை மூலம் டார்க் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தது.

    கோவை

    7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

    இதற்கிடையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெரோஸ் இஸ்மாயில், முகமது அசாருதீன், உமர் பாரூக், நவாஸ் இஸ்மாயில், பெரோஸ்கான் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க NIA அதிகாரிகள் அனுமதி பெற்றனர்.

    இதனையடுத்து, பெரோஸ் இஸ்மாயில், முகமது அசாருதீன், உமர் பாரூக், நவாஸ் இஸ்மாயில், பெரோஸ்கான் ஆகிய 5 பேரையும் கோவை காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக NIA அலுவலகத்திற்கு நேற்று காலை அழைத்து வந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கு பின், கோட்டைமேடு, உக்கடம், சத்தியமங்கலம் வனப் பகுதி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று, விசாரிக்க NIA அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 3- மார்ச் 7 வானிலை அறிக்கை
    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ்
    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம் சமூக வலைத்தளம்
    தமிழகத்தில் அட்டை மூலம் ஆவின் பாலினை மாதந்தோறும் பெற ஆதார் கட்டாயம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025