NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு 
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு

    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு 

    எழுதியவர் Nivetha P
    May 25, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்றம் கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி, ராஜபாதை சீரமைப்பு, மத்திய செயலகம், பிரதமர் இல்லம், துணை குடியரசு தலைவர் இல்லம்ஆகியவைகளை உள்ளடக்கி புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமான பணிகள் துவங்கியது.

    தற்போது இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வரைப்படங்கள் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து வரும் 28ம் தேதி மோடி அவர்கள் இதனை திறந்துவைக்கவுள்ள பட்சத்தில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திறப்பு விழா 

    திறப்பு விழாவை புறக்கணிப்பதில் மாற்றம் இல்லை - எதிர்க்கட்சிகள் 

    இந்நிலையில் அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தனது ட்விட்டரில், ஜனாதிபதி நாட்டின் தலைவராவார்,அரசின் தலைவர் பிரதமர்.

    இவர் அரசுச்சார்பாக பாராளுமன்றம் நிகழ்வினை வழிநடத்துகிறார்.

    ஜனாதிபதி இருஅவையிலும் உறுப்பினராக இல்லாமல் உள்ளநிலையில், பிரதமர் உறுப்பினராகவுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    இச்சூழலில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல்காங்கிரஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட 19 கட்சிகள் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து விழாவினை புறக்கணிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

    புதிய நாடாளுமன்றத்தினை குடியரசுத்தலைவர் தான் திறக்கவேண்டும். பிரதமர் அல்ல என்று அவர்கள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இம்முடிவினை எடுத்துள்ளனர்.

    அவர்களின் இம்முடிவினை திரும்பப்பெறும்படி, மத்தியஅமைச்சர் பிரகலாத்ஜோஷி கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்தினை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று(மே.,25)பொதுநலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன் கமல்ஹாசன்
    வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்  பிரதமர் மோடி
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்? வேளாண்

    மத்திய அரசு

    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை  ஓடிடி
    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  இந்தியா
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை

    பிரதமர் மோடி

    மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை  இந்தியா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
    சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை  அம்பேத்கர்
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025