NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் 
    பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பலர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இன்று(ஏப் 28) வழக்குத் தொடரப்படும் என டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மல்யுத்த வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிஜ் பூஷன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பலர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மல்யுத்த வீரர்கள் இது குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்த போதிலும், டெல்லி காவல்துறை FIR பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    அதனால், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குத் தொடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    details

    வழக்கு பதிவு செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்: மல்யுத்த வீரர்கள் 

    பிரிஜ் பூஷன் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    மேலும், "சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற மல்யுத்த வீரர்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மனுவில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்த விஷயத்தை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்," என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறி இருந்தார்.

    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள், இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனர்.

    இந்நிலையில், இன்று பிரிஜ்பூஷன் சரண் சிங் வழக்கு பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    பாஜக

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   வெளியுறவுத்துறை
    புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு இந்திய அணி
    வீட்டு வேலையை செய்ய மாணவர் உருவாக்கிய ரோபோ - அசத்தலான கண்டுப்பிடிப்பு!  மேற்கு வங்காளம்
    இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு  கொரோனா

    டெல்லி

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு விழுப்புரம்
    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு இந்தியா
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI இந்தியா

    பாஜக

    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் புதுச்சேரி
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025