NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்

    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Aug 08, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.

    இவர் பூத்துறை செம்மண் குவாரியில் அதிகளவு செம்மண்ணை எடுத்து தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

    திமுக ஆட்சி காலத்தில் 2006ல் இருந்து 2011வரை இவர் செய்த இந்த செம்மண் கடத்தலால் அரசுக்கு ரூ.28.36 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சரின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியிலுள்ள பொன்முடி வீட்டில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஒத்திவைப்பு 

    சென்னை மற்றும் விழுப்புர மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை

    மேலும் சென்னை மற்றும் விழுப்புர மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அதே போல் அமைச்சரின் மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.

    சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை விழுப்புரத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது என்று தெரிகிறது.

    அதன்படி இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஒத்திவைத்து விழுப்புர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    தமிழ்நாடு
    உயர்கல்வித்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    திமுக

    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி   தமிழ்நாடு
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இந்தியாவில் வருமான வரி வசூலில் தமிழகத்திற்கு 4-ம் இடம் வருமான வரித்துறை
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு  கர்நாடகா
    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  திருச்சி

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025