NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு 

    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    05:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மகளிர் ஆணையம் டெல்லி போலீசில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள்(IFSO) பிரிவு இனி ரேகா ஷர்மாவுக்கு எதிராக பேசப்பட்ட இழிவான வார்த்தைகள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும்.

    அதன்பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    இந்தியா 

    எதனால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது?

    கடந்த வியாழன் அன்று, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் நடந்த இடத்திற்கு ரேகா ஷர்மா வந்ததைக் காட்டும் வீடியோவில் மொய்த்ரா கருத்து தெரிவித்திருந்தார்.

    அந்த வீடியோவில் ஒரு நபர் ரேகா ஷர்மாவுக்கு குடையைப் பிடித்துக்கொண்டு அவருக்கு பின்னால் நடப்பதைக் காட்டியது.

    இந்நிலையில், ரேகா ஷர்மா தனது சொந்தக் குடையை ஏன் எடுத்துச் செல்லவில்லை என்று ஒரு சமூக ஊடகப் பயனர் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு பதிலளித்த மஹுவா மொய்த்ரா, "அவர் (ரேகா ஷர்மா) தனது முதலாளியின் பாவாடையை தூக்கி பிடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்" என்று கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி  மேற்கு வங்காளம்
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை
    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலின்
    கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி பாஜக

    இந்தியா

    பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது குஜராத்
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    30வது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார் இந்திய ராணுவம்
    ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025