Page Loader
மதுரை அவுட்டர் ரிங் ரோட்டில் கோர விபத்து; பதைபதைக்கவைக்கும் CCTV காட்சிகள் வெளியானது
அந்த விபத்து பதிவான CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

மதுரை அவுட்டர் ரிங் ரோட்டில் கோர விபத்து; பதைபதைக்கவைக்கும் CCTV காட்சிகள் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2024
02:36 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் இன்று காலை நடைபெற்ற ஒரு விபத்தில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகினர். அந்த விபத்து பதிவான CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்த கனகவேல் என்பவர், மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, இன்று காலை குடும்பத்துடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். வண்டி சிவரக்கோட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அதனை மோதுவதை தவிர்க்க கனகவேல் கார்-ஐ வேகமாக திருப்ப, கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் இடித்து, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

embed

விபத்து CCTV

VIDEO | Five people were reportedly killed when a car collided with a two-wheeler on the Virudhunagar-#Madurai highway in Sivarakottai near Tirumangalam earlier today. The accident was caught on CCTV. (Disturbing visuals. Viewers discretion is advised.) pic.twitter.com/Vl4rfsPMbc— Press Trust of India (@PTI_News) April 10, 2024