NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
    இந்தியா

    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்

    எழுதியவர் Nivetha P
    February 09, 2023 | 11:05 am 0 நிமிட வாசிப்பு
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்

    ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். வயலில் கயிறால் கட்டப்பட்டிருந்த ஒட்டகம் ஒன்று மற்றொரு ஒட்டகத்தை கண்டு ஆவேசமாக கயிற்றினை அவிழ்த்து கொண்டு ஓடியுள்ளது. இதனை கண்ட சோகன்ராம் நாயக் அந்த ஒட்டகத்தை பிடிக்க முயன்றபொழுது அது அவரது கழுத்தினை இறுக்கி பிடித்துள்ளது. தொடர்ந்து சோகன்ராம் மகன் மோகன் ராம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தோர் குச்சிகளை வைத்து ஒட்டகத்தை மிரட்டியுள்ளனர். எனினும் அந்த ஒட்டகம் பிடியைவிடாமல் இருந்ததால் அவரது கழுத்தில் கயிறு மேலும் இறுக்கப்பட்டுள்ளது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சோகன்ராம் பரிதாபமாக உயிரிழந்தார். சோகன் ராம் உயிரிழந்ததால் அப்பகுதி மக்களும் அவரது குடும்பத்தாரும் பெரும்சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஒட்டகத்திற்கு மனநலம் சரியில்லை என்று கூறிய கிராமவாசிகள்

    இதனையடுத்து, அந்த ஒட்டகத்தை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், அதனை ஒரு மரத்தில் கட்டிவைத்து குச்சிகளை கொண்டு அடித்துள்ளார்கள். இதனால் அந்த ஒட்டகம் இறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடம் கேட்ட பொழுது, ஒட்டகத்திற்கு மனநலம் சரியில்லை. அதனால் தான் யாரென்று அடையாளம் தெரியாமல் தனது உரிமையாளரையே கொன்றுள்ளது. இதனை அப்படியே விட்டால் கிராமத்தில் உள்ள அனைவரையும் வெறி கொண்டு தாக்கக்கூடும். அதனால் தான் அதனை கொன்றோம் என்று கூறியுள்ளார். கடந்த 20நாட்களுக்கு முன்னர் தான் சோகன் ராம் அந்த ஒட்டகத்தை வாங்கியதாகவும், இயல்பிலேயே அது முரட்டுத்தனம் கொண்டதாக தான் இருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து எவ்வித புகாரும் அளிக்கப்படாத காரணத்தினால் வழக்குகளும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராஜஸ்தான்
    இந்தியா
    வைரல் செய்தி

    ராஜஸ்தான்

    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ இந்தியா

    இந்தியா

    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் தமிழ்நாடு
    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி சுற்றுலாத்துறை
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    வைரல் செய்தி

    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் மத்திய பிரதேசம்
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் மும்பை
    வைரல் வீடியோ:பள்ளி ஆண்டு விழாவில் தந்தை-மகளின் அழகான தருணம் ட்ரெண்டிங் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023