NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்

    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    வயலில் கயிறால் கட்டப்பட்டிருந்த ஒட்டகம் ஒன்று மற்றொரு ஒட்டகத்தை கண்டு ஆவேசமாக கயிற்றினை அவிழ்த்து கொண்டு ஓடியுள்ளது.

    இதனை கண்ட சோகன்ராம் நாயக் அந்த ஒட்டகத்தை பிடிக்க முயன்றபொழுது அது அவரது கழுத்தினை இறுக்கி பிடித்துள்ளது.

    தொடர்ந்து சோகன்ராம் மகன் மோகன் ராம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தோர் குச்சிகளை வைத்து ஒட்டகத்தை மிரட்டியுள்ளனர்.

    எனினும் அந்த ஒட்டகம் பிடியைவிடாமல் இருந்ததால் அவரது கழுத்தில் கயிறு மேலும் இறுக்கப்பட்டுள்ளது.

    இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சோகன்ராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சோகன் ராம் உயிரிழந்ததால் அப்பகுதி மக்களும் அவரது குடும்பத்தாரும் பெரும்சோகத்தில் ஆழ்ந்தனர்.

    புகார் ஏதும் அளிக்கப்படவில்லை

    ஒட்டகத்திற்கு மனநலம் சரியில்லை என்று கூறிய கிராமவாசிகள்

    இதனையடுத்து, அந்த ஒட்டகத்தை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், அதனை ஒரு மரத்தில் கட்டிவைத்து குச்சிகளை கொண்டு அடித்துள்ளார்கள்.

    இதனால் அந்த ஒட்டகம் இறந்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடம் கேட்ட பொழுது, ஒட்டகத்திற்கு மனநலம் சரியில்லை. அதனால் தான் யாரென்று அடையாளம் தெரியாமல் தனது உரிமையாளரையே கொன்றுள்ளது.

    இதனை அப்படியே விட்டால் கிராமத்தில் உள்ள அனைவரையும் வெறி கொண்டு தாக்கக்கூடும்.

    அதனால் தான் அதனை கொன்றோம் என்று கூறியுள்ளார்.

    கடந்த 20நாட்களுக்கு முன்னர் தான் சோகன் ராம் அந்த ஒட்டகத்தை வாங்கியதாகவும், இயல்பிலேயே அது முரட்டுத்தனம் கொண்டதாக தான் இருந்தது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து எவ்வித புகாரும் அளிக்கப்படாத காரணத்தினால் வழக்குகளும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023

    இந்தியா

    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    உயரம் தாண்டுதலில் உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர்! இந்திய அணி
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான்
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி மோடி

    வைரல் செய்தி

    வைரலாகும் வீடியோ: 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற பைக் ஆசாமி இந்தியா
    'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப் நடிகர் அஜித்
    உலகின் மிக வயதான நபர் 118 வயதில் உயிரிழந்தார் உலகம்
    விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி; அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார் பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025