NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு
    இந்தியா

    72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு

    72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு
    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023, 03:09 pm 0 நிமிட வாசிப்பு
    72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு
    நவம்பர் 19, 1948 இல் திவாலான பெர்ஹாம்பூர் வங்கி தொடர்பான வழக்கு இது.

    இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றம், 72 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான வழக்கை தீர்த்துவைத்துள்ளது. இதன் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, 1951 இல் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு பிறந்தவர். இது முந்தைய பெர்ஹாம்பூர் வங்கி லிமிடெட் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்காகும். 1952 இல் தாக்கல் செய்யப்பட்ட நாட்டின் மிகப் பழமையான நிலுவையில் உள்ள இரு வேறு வழக்குகளை நீதிமன்றம் இன்னும் விசாரித்து வருகிறது. இந்த இரண்டு வழக்குகளும் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள சிவில் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணை இந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

    பெர்ஹாம்பூர் வழக்கு

    பெர்ஹாம்பூர் வழக்கு, இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு என்று தேசிய நீதித்துறை தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 19, 1948 இல் திவாலான பெர்ஹாம்பூர் வங்கியின் செயல்பாடுகளை நிறுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கியது. திவாலான வங்கி கடனாளிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்காக பல வழக்குகளில் சிக்கியது. இந்த கடனாளிகளில் பலர் வங்கியின் உரிமைகோரல்களை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினர். வங்கி கலைப்பு உத்தரவை எதிர்க்கும் மனு செப்டம்பர் 2022 இல் இரண்டு முறை விசாரணைக்கு வந்தது, ஆனால் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு 2006ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் தகவல் புதுப்பிக்கப்படாததால் இது நிலுவையிலேயே இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல் 2023
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு
    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா சமந்தா ரூத் பிரபு

    இந்தியா

    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி
    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023