NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு
    நவம்பர் 19, 1948 இல் திவாலான பெர்ஹாம்பூர் வங்கி தொடர்பான வழக்கு இது.

    72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றம், 72 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான வழக்கை தீர்த்துவைத்துள்ளது.

    இதன் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, 1951 இல் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு பிறந்தவர்.

    இது முந்தைய பெர்ஹாம்பூர் வங்கி லிமிடெட் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்காகும்.

    1952 இல் தாக்கல் செய்யப்பட்ட நாட்டின் மிகப் பழமையான நிலுவையில் உள்ள இரு வேறு வழக்குகளை நீதிமன்றம் இன்னும் விசாரித்து வருகிறது.

    இந்த இரண்டு வழக்குகளும் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள சிவில் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழக்குகள் மீதான விசாரணை இந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

    கொல்கத்தா உயர் நீதிமன்றம்

    பெர்ஹாம்பூர் வழக்கு

    பெர்ஹாம்பூர் வழக்கு, இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு என்று தேசிய நீதித்துறை தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நவம்பர் 19, 1948 இல் திவாலான பெர்ஹாம்பூர் வங்கியின் செயல்பாடுகளை நிறுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கியது.

    திவாலான வங்கி கடனாளிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்காக பல வழக்குகளில் சிக்கியது. இந்த கடனாளிகளில் பலர் வங்கியின் உரிமைகோரல்களை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினர்.

    வங்கி கலைப்பு உத்தரவை எதிர்க்கும் மனு செப்டம்பர் 2022 இல் இரண்டு முறை விசாரணைக்கு வந்தது, ஆனால் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு 2006ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் தகவல் புதுப்பிக்கப்படாததால் இது நிலுவையிலேயே இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம் போராட்டம்
    ராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு இந்தியா
    5G க்கான டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ 5G
    இந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025