NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!
    பைஜூஸ் சி.இ.ஓ ரவீந்திரன்(படம்: சமயம் தமிழ்)

    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபலமான ஆன்லைன் கற்றல் தளமான 'பைஜூஸ்' பெற்றோர்களை மிரட்டி தங்கள் தளத்தில் சேரவைப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.

    இந்த நிறுவனம் குறித்து பல பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாக NCPCR தலைவர் பிரியங் கானூங்கோ கூறியுள்ளார்.

    பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரன் கேட்கப்பட்ட ஆவணங்களோடு நாளை(டிச:23) நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது.

    ஆனால், தற்போது பைஜூஸ் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

    22 Dec 2022

    பைஜூஸ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:

    இது குறித்து பேசிய NCPCR தலைவர் பிரியங் கானூங்கோ,

    "பைஜூஸ் நிறுவனம் பெற்றோர்களின் மொபைல் எண்களை தரகர்கள் மூலம் முறைகேடான வகையில் வாங்கியுள்ளது.

    பின், முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் கல்வி கற்காத மற்றும் பொது விவரம் அறியாத பெற்றோரைக் குறிவைத்து மிரட்டியுள்ளனர்.

    அவர்களுடன் நயமாக பேசி குழந்தைகள் தங்கள் நிறுவனத்தில் படிக்கவில்லை என்றால் மக்காகிவிடுவர் என்று மூளை சலவை செய்துள்ளனர்.

    அவர்களை அதிகப்படியான கட்டணம் கட்ட சொல்லியும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க சொல்லி இருக்கிறோம்.

    இந்த விசாரணைகள் அனைத்தும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்(2005) 14வது பிரிவிற்குக் கீழ் நடைபெற்று வருகிறது."

    என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு டிரெண்டிங்
    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? எம்எஸ் தோனி
    டெல்லி ஆசிட் வீச்சு: ஈகாமர்ஸ் ஷாப்பிங் தளங்களுக்கு நோட்டீஸ்! டிரெண்டிங்
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025