NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி 
    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி

    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி 

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இங்கிருந்து எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று(டிச.,27) திடீரென எண்ணெய்யை வெளியேற்றக்கூடிய பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த பாய்லர் வெடித்த பலத்த சத்தத்தில் அச்சமடைந்த நிறுவனத்தின் உள்ளிருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

    அப்பகுதி மக்களும் இந்த சத்தம் கேட்டு அச்சமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    மேலும், இந்த விபத்தில் 2 ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

    விபத்து 

    சிகிச்சை பலனின்றி ஊழியர் ஒருவர் பலி 

    சரவணன், பெருமாள் என்னும் இந்த 2 ஊழியர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் பெருமாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளது.

    இதற்கிடையே, இந்த விபத்தால் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது.

    இது குறித்த தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தண்டையார்பேட்டை பகுதி சுற்றுவட்டாரத்தில் பல எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து எண்ணெய் கசிவால் தான் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்த ஆய்வு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பெட்ரோல்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

     ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் - சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து காவல்துறை
    தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் மிதமான மழை  கனமழை
    சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்  ரயில்கள்
    மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள் ஸ்டாலின்

    பெட்ரோல்

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  மத்திய அரசு
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம் 2024 மக்களவை தேர்தல்

    காவல்துறை

    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  சபரிமலை
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் திருச்சி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி

    காவல்துறை

    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் சபரிமலை
    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்  சென்னை
    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை பெங்களூர்
    பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025