NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்
    பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் மீட்பு படையினர்.

    வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

    எழுதியவர் Srinath r
    Dec 08, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வேளச்சேரியில் ஏற்பட்ட 60 அடி பள்ளத்தில் சிக்கிய, 21 வயது வாலிபரின் உடல் 100 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில், டிசம்பர் 4ம் தேதி அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த, நரேஷ் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    நரேஷ் மீட்கப்படுவார் என நம்பி அப்பகுதியில் காத்திருந்த குடும்பத்தினர், தற்போது அவரின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அப்பள்ளத்தில் சிக்கியுள்ள ஜெயசீலன், அடையாளம் தெரியாத புலம்பெயர்ந்த தொழிலாளியை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    2nd card

    விடுமுறை நாளிலும் பணிக்கு வரச் சொன்ன பெட்ரோல் பங்க் நிர்வாகம்

    பள்ளம் ஏற்பட்ட கட்டுமான தளத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில், நரேஷ் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வேளச்சேரியில் உள்ள மற்றொரு பங்கில் வேலை பார்த்து வந்த நரேஷ், ஆட்பற்றாக்குறையால் மூன்று நாட்களுக்கு முன்னர் இங்கு பணியில் சேர்ந்தார்.

    இந்நிலையில், அரசு விடுமுறையான 4ம் தேதியன்று நரேஷை பணிக்கு வரச் சொல்லி, பெட்ரோல் பங்க் நிர்வாகம் அழைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் நரேஷ் அதற்கு முன்னர் தொடர்ந்து மூன்று நாட்கள் பணியில் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    3rd card

    சம்பவ இடத்தில் பெருநகர சென்னை மாநகர ஆணையர் ஆய்வு

    பள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுமான நிறுவனம் இங்கு செய்து வந்த பணிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    அதன் பின், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

    மண்சரிவு ஏற்பட்டதனால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தாமதம் ஏற்படுவதாக கூறிய ஆணையர், முதல்வர் மீட்பு பணிகள் குறித்து தினசரி விசாரிப்பதாகவும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    புயல் எச்சரிக்கை
    மழை
    சென்னை மாநகராட்சி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    சென்னை

    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மு.க ஸ்டாலின்

    புயல் எச்சரிக்கை

    பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர் இந்தியா
    பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து  இந்தியா
    அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்' இந்தியா
    பிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட் இந்தியா

    மழை

    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  தெலுங்கானா
    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை ஆய்வு மையம்
    சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை

    சென்னை மாநகராட்சி

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் மேயர் பிரியா
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  கனமழை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்
    சென்னை பெருவெள்ளத்தின் சில வைரல் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025