NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்

    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 27, 2023
    09:29 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

    குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சியில் இரண்டு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்கள் சென்ற பாதையை கண்டறிய முயன்று வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    2nd card

    மாலை 5 மணி அளவில் குண்டுவெடிப்பு

    செவ்வாய் மாலை சுமார் 5 மணியளவில் சாணக்கியபுரி இஸ்ரேல் தூதராகத்திற்கு பின்புறம் குண்டு வெடித்ததாக, ஒரு அடையாளம் தெரியாத நபர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு ஆய்வு செய்தனர். இருப்பினும் அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை.

    "மாலை 5:08 மணியளவில், தூதரகத்திற்கு அருகாமையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியும். டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.

    3rd card

    தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'சர் அல்லா ரெசிஸ்டன்ஸ்'

    அப்பகுதியில் போலீசாரின் தீவிரத் தேடுதலில், இஸ்ரேல் கொடியில் சுற்றப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பக்க கடிதம் ஒன்று கிடைத்தது.

    மிகவும் ஆட்சியபனைக்குரிய வகையில் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில், காசாவில் இஸ்ரேலில் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. காவல்துறை இந்த கடிதம் குறித்து மேலும் எந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

    "சர் அல்லா ரெசிஸ்டன்ஸ்" என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழு ஒன்று, குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்

    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார் அமெரிக்கா
    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்
    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்

    காசா

    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க் எலான் மஸ்க்
    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல் இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் செல்லும் எலான் மஸ்க்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரங்களையும் பார்வையிடுகிறார்? எலான் மஸ்க்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது பாலஸ்தீனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025