NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
    ஹரியானா வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

    ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2024
    08:06 pm

    செய்தி முன்னோட்டம்

    எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

    இதன் மூலம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது இதுவே முதல் முறையாகும்.

    மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

    ஹரியானாவில், முதல்வராக உள்ள நயாப் சிங் சைனி முதல்வராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை உமர் அப்துல்லா முதலமைச்சராக வருவார் என பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி

    ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி

    அண்டை மாநிலங்களான டெல்லி மற்றும் பஞ்சாபில் வெற்றி பெற்றதன் விளைவாக ஹரியானாவில் முன்னிலையை நிலைநிறுத்தும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    ஹரியானாவில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய தேசிய லோக் தள் 2 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் சுயேட்சைகள் மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

    எனினும் ஜம்மு காஷ்மீரில் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அங்கு பாஜக 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன.

    மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்தில் வென்றுள்ள நிலையில், சுயேட்சைகள் 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

    நியமன சர்ச்சை

    பாஜக ஒருபோதும் ஜம்மு காஷ்மீரில் தனித்து ஆட்சி செய்ததில்லை

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாஜக வென்ற பெரும்பாலான இடங்கள் ஜம்முவைச் சேர்ந்தவை என்று இந்திய தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதே நேரத்தில் காஷ்மீர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்ததாகத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் பாஜக ஒருபோதும் தனித்து ஆட்சி அமைத்ததில்லை.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு துணைநிலை ஆளுநர் ஐந்து எம்எல்ஏக்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது.

    இதில் இரண்டு பெண்கள், இரண்டு காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து குடியேறிய ஒருவர் இடம்பெற முடியும்.

    சட்டசபையில் பாஜகவின் பலத்தை செயற்கையாக கூட்டுவதற்காகவே இந்த ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் முடிவு
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல் முடிவு

    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  தெலுங்கானா
    3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  காங்கிரஸ்
    டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு மல்யுத்தம்
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல்

    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை சட்டமன்றம்
    ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு  ஒடிசா
    பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை மஹுவா மொய்த்ரா
    கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜகவின் அண்ணாமலை அண்ணாமலை

    தேர்தல் ஆணையம்

    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு தேர்தல்
    தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது  டெல்லி
    தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழகம்
    தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்        தேர்தல்

    இந்தியா

    இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்? விமானப்படை
    வானிலை அறிக்கை முதல் AI குறிப்பு வரை: Google Maps-இன் புதிய அம்சங்கள் இதோ! கூகுள்
    கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை
    இவி9 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது கியா மோட்டார்ஸ்; விலை ரூ.1.3 கோடி மட்டுமே! கியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025