தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் திடீரென ஆளும் கட்சிக்கு மாறிய பாஜக எம்எல்ஏ தபசி மொண்டல்
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய கூட்டாளியான பாஜக எம்எல்ஏ தபசி மொண்டல், ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.
இது சுவேந்து அதிகாரியின் முக்கிய கோட்டையான புர்பா மெதினிபூரில் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2026இல் நடக்க உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், இந்த அணி மாற்றம் பாஜகவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என திரிணாமுல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
மாநில மின்சார அமைச்சர் அருப் பிஸ்வாஸ் முன்னிலையில் கொல்கத்தா தலைமையகத்தில் மொண்டல் முறையாக திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
காரணம்
கட்சி மாறியதற்கான காரணம்
பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதற்கான தனது முடிவை விளக்கிய அவர், "முதலமைச்சரின் மாநில வளர்ச்சிக்கான திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.
அவரை கட்சியில் வரவேற்ற திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவின் அரசியலில் வளர்ந்து வரும் ஏமாற்றத்தை எடுத்துக்காட்டியது மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையைப் பாராட்டியது.
மொண்டலின் அரசியல் பயணம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஹால்டியா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அவர் வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பு 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுவேந்து அதிகாரி திரிணாமுல் கட்சியை விட்டு பாஜகவுக்கு மாறியபோது இவரும் பாஜகவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.