NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி
    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி

    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி

    எழுதியவர் Nivetha P
    Jul 27, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கலவரமாக வெடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பதே அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி அண்மையில் வீடியோ மூலம் செய்தியினை பதிவு செய்துள்ளார்.

    அவர் அதில் கூறியதாவது, வன்முறை காரணமாக கலவரம் மிகுந்து பாதிப்பிற்குள்ளாகியுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கும், பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும்,

    "ஏனெனில் அவர் குறிப்பிட்ட சிலருக்கு தான் பிரதமர், அனைத்து மக்களுக்கும் பிரதமர் இல்லை" என்றும் கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி 

    நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியினை நினைத்து கவலைப்படுவதில்லை 

    மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக மட்டும் மோடி செயல்படுகிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், மணிப்பூர் மாநிலமே கலவர தீயில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் நாட்டின் பிரதமர் ஏன் சம்பவ இடத்திற்கு சென்று அதுகுறித்து பேசவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, இந்தியர்களுக்கு காயம் ஏற்படுகையில் அவர்களின் வலியினை நம்மால் உணர முடியும்.

    ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாஜக'வினை சேர்ந்தவர்களால் அதனை உணர முடியாது.

    பதவிக்காக மணிப்பூரை மட்டுமல்ல உலகத்தினையே அழிக்க துணியும் இவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியினை நினைத்து கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    மோடி
    மணிப்பூர்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் டெல்லி
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா

    மோடி

    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் இந்தியா
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு  இந்தியா
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா

    மணிப்பூர்

    இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள்  இந்தியா
    மகளிர் குழுக்களின் உதவியை நாடிய மணிப்பூர் முதல்வர் இந்தியா
    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தம், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025