NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் 
    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்

    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 18, 2023
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2002ம்ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் பில்கிஸ் பானு என்னும் பெண்மணி கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    அவரது குடும்பத்தினரும் இந்த கலவரத்தில் கொலைச்செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால் கடந்தாண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

    இதனால் குஜராத் அரசு மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் சுபாஷினி அலி என்பவர் தொடர்ந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட்.,17) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது 2008ல் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் 11 பேரும், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் இருந்துள்ளனர்.

    எனவே, 1992-சட்டதிருத்த தண்டனை குறைப்பதற்கான விதியின்கீழ் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்று குஜராத் அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

    விசாரணை 

    வழக்கின் விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    அதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குஜராத் அரசிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    அதன்படி, 1992-சட்டதிருத்த தண்டனை குறைப்பதற்கான விதி எந்தளவுக்கு நடைமுறையில் உள்ளது?

    மற்ற கைதிகளுக்கு இது எந்தளவிற்கு பயன்பட்டுள்ளது?

    அதிகபட்ச தண்டனையான குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தண்டனை குறைப்பு செய்யப்பட்டு அவர்களை எவ்வாறு விடுதலை செய்தீர்கள்?

    14 ஆண்டுகள் சிறைவாசம் கொண்டிருந்த கைதிகள் எந்த விதிமுறையின்கீழ் விடுதலை செய்யப்பட்டனர்? என்று பல கேள்விகளை முன்வைத்தனர்.

    பின்னர், குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதன் சரியான காரணத்தினை குஜராத் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையினை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பலாத்காரம்
    கலவரம்
    குஜராத்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தூத்துக்குடி
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025