NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

    பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 08, 2024
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மாநில அரசு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

    அந்த உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்த நடவடிக்கையை "மோசடி செயல்" என்றும் கூறியது.

    இந்த தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் பி.வி. நாகர்தனா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனு செல்லுபடியாகும் என்று கூறியது.

    சோஜிவ்ல்

    பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டிய விடுவிக்க உத்தரவு பிறப்பித்த குஜராத் 

    தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மகாராஷ்டிராவில் வைத்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதால் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் தான் இந்த வழக்கு தொடர்பான உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    "குற்றவாளிக்கு தண்டனை விதித்த மாநிலத்தின்(மகாராஷ்டிரா) அரசாங்கம் தான் அவரக்ளுக்கு மன்னிப்பு வழங்க முடியும். குற்றம் நடந்த மாநிலத்தின்(குஜராத்) அரசாங்கம் அதை செய்ய தகுதியுடையது அல்ல." என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது பில்கிஸ் பானோ பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவர் 21 வயது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    குஜராத்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    உச்ச நீதிமன்றம்

    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  டெல்லி
    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு உயர்நீதிமன்றம்
    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு  தமிழக அரசு
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா

    குஜராத்

    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு உணவு பிரியர்கள்
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  இந்தியா
    பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025