NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு
    ஒவ்வொரு வாரமும் பிஜூலி பிரசாத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

    இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Aug 22, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிக வயதான உள்நாட்டு ஆசிய யானை தனது 89வது வயதில் நேற்று(ஆகஸ்ட் 21) காலமானது.

    பிஜூலி பிரசாத் என்று அழைக்கப்படும் ராட்சத ஜம்போ யானை முதிர் வயது காரணமாக தி வில்லியம்சன் மாகோர் குழுமத்தின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தது.

    பிஜூலி பிரசாத் ஓய்வு பெற்ற பிறகு, அந்த தேயிலை தோட்டத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    கார்ப்பரேட் ஊதியத்தில் இரண்டு யானை காப்பாளர்கள், பிஜூலி பிரசாத்தை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர்.

    அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த அந்த யானைக்கு ஒவ்வொரு நாளும் மூன்று ராஜ போக விருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.

    மேலும், ஒவ்வொரு வாரமும் பிஜூலி பிரசாத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

    தஃவ்க்

    யானையின் இறுதி சடங்குக்கு கூடிய மிகப்பெரும் கூட்டம் 

    கடைசியாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, பிஜூலி பிரசாத்தின் எடை 400 கிலோவாகும்.

    "எனக்கு தெரிந்தவரை, பிஜூலி பிரசாத் தான் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மிகப் வயதான வளர்ப்பு யானை" என்று பத்மஸ்ரீ விருது பெற்றவரும் யானை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் குஷால் கோன்வர் சர்மா கூறியுள்ளார்.

    "பொதுவாக, காட்டு ஆசிய யானைகள் 62-65 ஆண்டுகள் வரை வாழும். நன்றாக கவனிக்கப்படும் வளர்ப்பு யானைகள் சுமார் 80 ஆண்டுகள் வரை வாழும்" என்று அவர் மேலும் கூறினார்.

    89 வயது பிஜூலி பிரசாத் உயிரிழந்ததை அடுத்து, ஒரு பெரும் இறுதி சடங்கு நடத்தப்பட்டது.

    அந்த இறுதி சடங்கில் விலங்கு பிரியர்கள், தேயிலை தோட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    இந்தியா

    லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம்  உலகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 17 தங்கம் வெள்ளி விலை
    இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம் மத்திய அரசு
    பாட்டா இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவிருக்கும் அடிடாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பேச்சுவார்த்தை வணிகம்

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025