NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
    இந்தியா

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023, 12:49 pm 1 நிமிட வாசிப்பு
    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
    பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

    தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோக்களை தயாரித்ததற்காக பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று(மார் 18) கைது செய்யப்பட்டார். பீகார் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் இவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அந்த காவல் நிலையத்தின் பொருளாதார குற்றப்பிரிவு அவரது உடமைகளை பறிமுதல் செய்ய அவரது வீட்டை அடைந்தனர். தமிழகத்தில் பணிபுரியும் பீகார் வாசிகள் குறித்து தவறான வீடியோக்களை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கை

    "தென் மாநில தொழிலாளர் பிரச்சனை குறித்த போலி செய்தி விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்ட காஷ்யப், உடமைகளை பறிமுதல் செய்துவிடுவோம் என்ற அச்சத்தில் சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தார்." என்று பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்படுவது/தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்புவதில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் காஷ்யப் மற்றும் பிறருக்கு எதிராக EOU மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் திருப்பதி
    அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள் கோவை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு சென்னை

    தமிழ்நாடு

    இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வைரல் செய்தி
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் சென்னை

    இந்தியா

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து இந்திய அணி
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்
    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி உத்தரப்பிரதேசம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023