NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
    பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோக்களை தயாரித்ததற்காக பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று(மார் 18) கைது செய்யப்பட்டார்.

    பீகார் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் இவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

    அந்த காவல் நிலையத்தின் பொருளாதார குற்றப்பிரிவு அவரது உடமைகளை பறிமுதல் செய்ய அவரது வீட்டை அடைந்தனர்.

    தமிழகத்தில் பணிபுரியும் பீகார் வாசிகள் குறித்து தவறான வீடியோக்களை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பீகார்

    பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கை

    "தென் மாநில தொழிலாளர் பிரச்சனை குறித்த போலி செய்தி விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்ட காஷ்யப், உடமைகளை பறிமுதல் செய்துவிடுவோம் என்ற அச்சத்தில் சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தார்." என்று பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில்வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்படுவது/தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்புவதில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் காஷ்யப் மற்றும் பிறருக்கு எதிராக EOU மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி எலக்ட்ரிக் வாகனங்கள்
    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை இந்தியா
    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்! ஆட்டோமொபைல்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18 வானிலை அறிக்கை
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு மாவட்ட செய்திகள்
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு நீட் தேர்வு
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025