NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது
    இந்த நடவடிக்கை திருநர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கும் திருநர்(உரிமைகள் பாதுகாப்பு) விதிகளுக்கு எதிரானது.

    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    03:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சமூகக் குழுக்களைத் கணக்கெடுத்த அரசாங்கம், "மூன்றாம் பாலின" உறுப்பினர்களை தனி ஜாதியாகக் கணக்கிட்டது மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ஒருவரின் பாலின அடையாளத்தை சாதியாகக் கருத முடியாது என்று பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

    பீகாரில் உள்ள சாதிகளை இப்போது எண் குறியீடுகளைப் பயன்படுத்தி அடையாளம் காணலாம். ஏப்ரல்-15 முதல் மே-15 வரை நடக்கும் கணக்கெடுப்புக்கு உதவும் வகையில், பீகாரில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும் ஒரு எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

    பிராமண சாதிகளின் துணைப்பிரிவுகள் பிராமணர்கள் என்ற ஒரே சமூக அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளன. பிராமணர்களின் சாதிக் குறியீடு 126 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், ராஜபுத்திர சாதி குறியீடு 169 என்றும் பூமிஹார் சாதி குறியீடு 142 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியா

    இது திருநர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்: பிரசாத்

    இந்த வரிசையில் "மூன்றாம் பாலினம்" என்று குறிப்பிடப்படும் திருநர்கள் 22ஆல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதுவரை, 215 சாதிகளுக்கு குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், "மூன்றாம் பாலினமும்" தனி சாதி என்ற அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பேசிய தொஸ்தானாசஃபர் என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் நிறுவனர்-செயலாளர் ரேஷ்மா பிரசாத், "ஒரு மனிதனின் பாலின அடையாளம் எப்படி அவர்களின் சாதியாக மாறும்? 'ஆண்' அல்லது 'பெண்' என்பதை சாதியாகக் கருதலாமா... அதே போல் 'திருநர்களை' சாதியாக எப்படி கருதுவது?" என்று கூறினார்.

    இந்த நடவடிக்கை திருநர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கும் திருநர்(உரிமைகள் பாதுகாப்பு) விதிகளுக்கு எதிரானது என்றும் பிரசாத் கூறியுள்ளார்.

    மேலும், இது குறித்து பீகார் முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    திருநர் சமூகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி? தொழில்நுட்பம்
    மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும்: கிச்சா சுதீப் கர்நாடகா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை மேற்கு வங்காளம்
    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் ஆம் ஆத்மி

    திருநர் சமூகம்

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநங்கை
    சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025