NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர் 
    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர்

    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர் 

    எழுதியவர் Nivetha P
    Jun 19, 2023
    04:25 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, தமிழ்நாடு மாநில திருவாரூர் மாவட்டத்தில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    இது காட்டூரில் உள்ள தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த கோட்டத்தில் கலைஞரின் பொது வாழ்வினை சித்தரிக்கும் வகையிலான அருங்காட்சியகங்கள், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கோட்டமானது நாளை(ஜூன்.,20) திறக்கப்படவுள்ளது.

    இந்த திறப்பு விழாவினையொட்டி காலை 10 மணிமுதல் நிகழ்ச்சிகள் துவங்கவுள்ளது.

    அதன்படி, கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    மதியம் 3.30 மணியளவில் பாட்டரங்கம் நடக்கும் நிலையில், அதன் பின்னரே இந்த கோட்டத்தின் திறப்பு விழா அரங்கேறவுள்ளது.

    திறப்பு விழா 

    விழா முடிந்ததும் நாளை மாலை பீகார் புறப்படும் முதல்வர் நிதிஷ் குமார் 

    அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் சிலையினை திறந்துவைத்து உரையாற்றவுள்ளார்.

    அதனையடுத்து, கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்துவைத்து பேசவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் முத்துவேலர் நூலகத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள வரும் பீகார் முதல்வர் நாளை காலை ஹைதராபாத் வழியே திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார்.

    அங்கிருந்து அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.

    மதிய வேளையில் சுமார் 2.30மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கவுள்ள நிலையில், 4.30 மணிக்கு விழா முடிந்ததும் மீண்டும் திருச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று, அங்கிருந்து பீகார் சென்றடைகிறார் முதல்வர் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    கருணாநிதி

    சமீபத்திய

    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19

    தமிழ்நாடு

    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை இந்தியா
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்  சென்னை
    தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு மத்திய அரசு
    கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா? திரௌபதி முர்மு

    மு.க ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு  ஆளுநர் மாளிகை
    தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  அமைச்சரவை
    பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு  திமுக
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் தமிழக அரசு
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025