NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்
    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்

    எழுதியவர் Siranjeevi
    Apr 26, 2023
    03:53 pm
    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்
    40 பெண்களுக்கு ஒரே கணவர் பெயரை பதிவு செய்துள்ளனர்

    இந்தியாவில் முதன் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டது. பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் 40 பெண்களுக்கும் ஒரே கணவர் என பெயரை பதிவு செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கணக்கீட்டிற்காக 500 கோடி ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக கணக்கெடுத்து வருகின்றனர். அப்போது அர்வாலி பகுதியில் வசிக்கும் 40 பெண்கள் ஒரே கணவரின் பெயரை பதிவு செய்துள்ளனர். அவரின் பெயர் ரூப்சந்த் எனக்கூறியுள்ளனர். பல குழந்தைகளும் தந்தை பெயர் ரூப்சந்த் எனக்கூறியுள்ளனர்.

    2/2

    40 பெண்களுக்கும் ஒரே கணவர் - உண்மை நிலவரம் என்ன?

    மேலும் 23 பெண்களின் ஆதார் அட்டையிலும் ரூப்சந்த் என கணவர் பெயரை பதிவிட்டுள்ளனர். உண்மையில் அர்வாலிவார்டு வசிப்பவர்கள் சிவப்பு விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாகவே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பணம் தருபவர் தான் ரூப்சந்த் என அந்த பெண்கள் கூறுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கையில் ரூப்சந்த் என்பவர் இல்லை என்பதும், அங்கு வசிப்பவர்கள் ரூப் என்றால் பணம், ரூபாயை கணவராக கருதுகின்றனர். அதனால் தான் அனைவரும் கணவர் பெயரை ரூப்சந்த் எனக்கூறுவதாக தெரிவிக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு  தமிழ்நாடு
    வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண்  பெங்களூர்
    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு!  மத்திய அரசு
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா அமித்ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023