NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா? 

    121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா? 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2024
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    ஹத்ராஸின் புல்ராய் முகல்கதி கிராமத்தில் போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் ஹரி என்ற சாமியாரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வை மனவ் மங்கள் மிலன் சத்பவனா சமகம் கமிட்டி ஏற்பாடு செய்தது.

    இந்த சம்பவம் குறித்து புகாரளிக்கப்பட்டதையடுத்து, அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் கூட்டத்திற்கு இடமளிக்க முடியாத அளவுக்கு சிறியதாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, அமைப்பாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா 

    யாரிந்த போலே பாபா? 

    போலே பாபா என்று அழைக்கப்படும் ஆன்மீகத் தலைவர் நாராயண் சாகர் ஹரி, எட்டாவில் உள்ள பாட்டியாலியைச் சேர்ந்தவர்.

    இவரது சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஆரம்ப காலங்களில், போலே பாபா தனது தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதன் பிறகு, அவர் காவல்துறையில் சேர்ந்தார். உத்தரபிரதேச காவல்துறையின் உள்ளூர் புலனாய்வு பிரிவில் அவர் பணியாற்றினார்.

    17 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்து வந்த அவர், ஒரு கட்டத்தில் தன்னை தானே ஒரு ஆன்மீக தலைவராக அறிவித்து கொண்டார்.

    1990களில் மத போதகராக உருவெடுத்த போலே பாபா, தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மத போதனைகள் செய்ய தொடங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    உத்தரப்பிரதேசம்

    தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி  அயோத்தி
    பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலுக்கு உள்ளிருந்த எடுக்கப்பட்ட முதல் வீடியோ  இந்தியா
    விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு  அயோத்தி
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்  அயோத்தி

    இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  டெல்லி
    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்  பிரதமர் மோடி
    'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு  மக்களவை
    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025