NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்

    பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 24, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி மாத இறுதிக்குள் பெங்களுரு கடைகளின் சைன்போர்டுகள் கன்னட மொழிக்கு மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    சைன்போர்டுகளில் உள்ள எழுத்துக்கள் குறைந்தது 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே(பிபிஎம்பி) அறிவித்துள்ளது.

    இந்த உத்தரவுக்கு இணங்காத கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மால்களின் உரிமம் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ரத்து செய்யப்படும் என்று ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே(பிபிஎம்பி)கூறியுள்ளது.

    பெங்களூருவில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் கன்னட மொழி பயன்படுத்துவது தொடர்பான கூட்டம் பிபிஎம்பி கமிஷனர் துஷார் கிரிநாத் தலைமையில் இன்று நடைபெற்றது.

    ட்ஜ்கவ்கிழ்ந்

    விதிகளை பின்பற்றாத கடைகளின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும்

    அனைத்து ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற கடைகளின் பெயர் பலகைகளில் கன்னடத்தை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும், இதை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூருவின் குடிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    பெயர் பலகைகளில் கன்னட மொழி பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை அனைவரும் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விதிகளை பின்பற்றாத கடைகளின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

    சமீபத்தில் சிக்பேட்டை பகுதியில் மொழி பிரச்சனையால் மார்வாரி விற்பனையாளர்கள் மீது கன்னட சார்பு குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. அதனையடுத்து, கன்னடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பெங்களூர்

    'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண் இந்தியா
    நாளை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்: என்ன இயங்கும்? என்ன இயங்காது? இந்தியா
    படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல் திரைப்பட அறிவிப்பு
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான் ஆட்டோமொபைல்
    சோனி மற்றும் ஜீ நிறுவனங்களின் இணைப்பு விரைவில் சாத்தியமாகுமா? சோனி
    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம் மல்லிகார்ஜுன் கார்கே
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025