NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு
    இந்தியா

    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு

    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு
    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022, 12:57 am 1 நிமிட வாசிப்பு
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு
    வாராக்கடன் தள்ளுபடி குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சர் (படம்: Good Returns Tamil)

    கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விஜய் மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி, ஜுன்ஜுன்வாலா, பாபா ராம்தேவின் ருச்சி சோயா போன்ற தொழிலதிபர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட 10,09,511 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது. 10 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பபெறப்பட்டுள்ளது. கடந்த 5 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்: 2017-18 ரூ.1,61,325 2018-19 ரூ.2,36,265 2019-20 ரூ.2,34,171 2020-21 ரூ.2,02,782 2021-22 ரூ.1,74,968 மொத்தம் ரூ.10,09,511

    கடன் தள்ளுபடி குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் அந்த கடன் தொகைக்கு கடன் பெற்றவர்களே பொறுப்பாவார்கள். அவர்களிடம் இருந்து அந்த கடனைத் திரும்பப்பெற தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வரவு செலவு கணக்குகளை சீர் செய்ய வங்கிகள் கடன்களைத் தள்ளுபடி செய்வது வழக்கம். கடன் நிலுவையில் இருந்து கொண்டே இருந்தால் வங்கிகள் நஷ்டத்தில் ஓடும். இதனால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்று இந்த கடன்களைத் தள்ளுபடி செய்ததாக அறிவிக்கும். கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் கடன் தொகைக்கு கடன் பெற்றவர்களே முழு பொறுப்பு. அவர்களிடம் இருந்து அந்த கடன் தொகையை வாங்கவும் அதற்காக அவர்களை எதிர்த்து வழக்குத் தொடரவும் வங்கிகளுக்கு முழு அதிகாரம் உண்டு.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    நிர்மலா சீதாராமன்
    இந்தியா

    சமீபத்திய

    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? ஓடிடி
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை டி20 கிரிக்கெட்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா

    நிர்மலா சீதாராமன்

    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு திட்டங்கள்
    அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில் நிதியமைச்சர்
    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத் இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    இந்தியா

    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி தமிழ்நாடு
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023