NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு
    வாராக்கடன் தள்ளுபடி குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சர் (படம்: Good Returns Tamil)

    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022
    12:57 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    விஜய் மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி, ஜுன்ஜுன்வாலா, பாபா ராம்தேவின் ருச்சி சோயா போன்ற தொழிலதிபர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட 10,09,511 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது.

    10 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பபெறப்பட்டுள்ளது.

    கடந்த 5 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்:

    2017-18 ரூ.1,61,325

    2018-19 ரூ.2,36,265

    2019-20 ரூ.2,34,171

    2020-21 ரூ.2,02,782

    2021-22 ரூ.1,74,968

    மொத்தம் ரூ.10,09,511

    கடன் தள்ளுபடி

    கடன் தள்ளுபடி குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் அந்த கடன் தொகைக்கு கடன் பெற்றவர்களே பொறுப்பாவார்கள். அவர்களிடம் இருந்து அந்த கடனைத் திரும்பப்பெற தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    வரவு செலவு கணக்குகளை சீர் செய்ய வங்கிகள் கடன்களைத் தள்ளுபடி செய்வது வழக்கம். கடன் நிலுவையில் இருந்து கொண்டே இருந்தால் வங்கிகள் நஷ்டத்தில் ஓடும். இதனால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    எனவே வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்று இந்த கடன்களைத் தள்ளுபடி செய்ததாக அறிவிக்கும்.

    கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் கடன் தொகைக்கு கடன் பெற்றவர்களே முழு பொறுப்பு.

    அவர்களிடம் இருந்து அந்த கடன் தொகையை வாங்கவும் அதற்காக அவர்களை எதிர்த்து வழக்குத் தொடரவும் வங்கிகளுக்கு முழு அதிகாரம் உண்டு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிர்மலா சீதாராமன்
    இந்தியா

    சமீபத்திய

    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவு
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! தொழில்நுட்பம்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025