NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

    எழுதியவர் Nivetha P
    May 06, 2023
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

    இங்குவரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனத்தினை மேற்கொண்டு தங்கள் காணிக்கைகளையும், நன்கொடைகளையும் வழங்கி செல்வர்.

    இந்நிலையில் இக்கோயிலின் நிர்வாகமான ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையானது புது இன்னலினை தற்போது எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

    அதன்படி, இக்கோயிலில் வசூலான காணிக்கைகளின் நாணயங்களை வாங்கிவைக்க வங்கிகளில் போதுமான இடமில்லை என்று கூறப்படுவதாக தெரிகிறது.

    இந்த அறக்கட்டளையானது, 13 வங்கிக் கணக்குகளை வைத்துள்ளது.

    அதில் 12வங்கிக்கணக்குகள் கோயிலுள்ள நகரத்திலேயே இருக்கும்நிலையில், ஒன்று மட்டும் நாசிக்கில் உள்ளது.

    இவ்வங்கிகள் அனைத்திலும் இந்த கோயிலில் வசூலான நன்கொடை ரூ.11கோடி நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது இவற்றுள் 4 வங்கிகள் இந்த அறக்கட்டளை மூலம் வரும் நாணையங்களை வாங்க மறுத்துள்ளனர்.

    சாய்பாபா 

    ரிசர்வ் வங்கிக்கு நேரடியாக கடிதம் எழுத முடிவு 

    இந்நிலையில் இது குறித்து தலைமை நிர்வாகி ராகுல் ஜாதவ், இந்த 4 வங்கி அதிகாரிகளும் தங்கள் வங்கியில் தினந்தோறும் வரும் நாணயங்களை வைக்கவே இடப்பற்றாக்குறையாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

    இது எங்கள் அறக்கட்டளைக்கு மிகுந்த பிரச்சனையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர், இதுகுறித்து ரிசர்வ்வங்கிக்கு நேரடியாக கடிதம் ஒன்றினை எழுதவுள்ளோம்.

    அதேபோல் அகமதாபாத்தில் உள்ள மற்ற வங்கிகளிலும் புது கணக்கினை துவக்கி அதில் இந்த வசூலாகும் காணிக்கைகளை வைக்க முடிவுசெய்துள்ளோம்.

    ஒவ்வொரு மாதமும் இங்கு வசூலாகும் காணிக்கைகளின் எண்ணிக்கை ரூ.28லட்சத்தினை நெருங்கும்.

    இதுவரை நாங்கள் கணக்கு வைத்திருந்த வங்கிகளில் இருந்து மாதாமாதம் சுழற்சிமுறையில் வங்கியிலிருந்து ஆட்கள் வந்து நாணையங்களை வாங்கிச்செல்வர் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    வங்கிக் கணக்கு
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    வங்கிக் கணக்கு

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை
    ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே கார்
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி இந்தியா

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025