NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி
    புதிய மைல்கல்லை எட்டிய பேங்க் ஆஃப் பரோடா வங்கி

    ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 19, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பங்குச்சந்தையில் இன்று முக்கிய அளவுகோல் குறியீடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று காலையிலேயே உயர்வைச் சந்தித்தது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்குகள்.

    இன்று காலை அதிகபட்சமாக 3.50% உயர்வைச் சந்தித்து ரூ.194.80 என்ற விலையை தேசிய பங்குச்சந்தையில் தொட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா.

    இந்திய பொதுத்துறை வங்கிகளில் SBI வங்கிக்கு அடுத்தபடியாக ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய இரண்டாவது பொதுத்துறை வங்கியாகியிருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா.

    இந்தியாவின் அதிக சந்தை மதிப்பை கொண்ட முதல் பொதுத்துறை வங்கியாக இயங்கி வரும் SBI வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.5.07 லட்சம் கோடி.

    இந்தியா

    இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள்: 

    இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ.17.29 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக விளங்கி வருகிறது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்.

    அதனைத் தொடர்ந்து, டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருக்கின்றன.

    இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட வங்கியாக விளங்கி வருகிறது எச்டிஎஃப்சி வங்கி.

    அதனைத் தொடர்ந்து, ரூ.6.44 லட்சம் கோடி மதிப்புடன் ஐசிஐசிஐ, 5.07 லட்சம் கோடி மதிப்புடன் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் இடம்பிடித்திருக்கின்றன.

    ரூ.1 லட்சம் கோடி மதிப்புடன் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட வங்கிகள் பட்டியலில் 6-வதாக இணைந்திருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா வங்கி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    பங்குச் சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வணிகம்

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    பங்குச்சந்தை செய்திகள்

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025