NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
    உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் கடுமையாக சாடியுள்ளது

    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 02, 2024
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராம்தேவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபோதும், பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவுகளை மீறியதற்காக பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.

    பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

    "நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம். மன்னிப்பு கேட்க அவர் (பாபா ராம்தேவ்) தனிப்பட்ட முறையில் இங்கே இருக்கிறார்" என்று பதஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இருப்பினும்,உச்ச நீதிமன்றம்,"ஒவ்வொரு தடையையும் உடைத்து விட்டீர்கள்... இப்போது மன்னிக்கவும் சொல்கிறீர்கள்" என்று கண்டித்தது.

    உச்ச நீதிமன்றம்

    மத்திய அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் கடுமையாக சாடியுள்ளது.

    "அலோபதியில் கோவிட்க்கு தீர்வு இல்லை என்று பதஞ்சலி நிர்வாகம் ஊருக்குச் சொல்லும் போது, மத்திய அரசு ஏன் கண்களை மூடிக்கொண்டது ?" என்று நீதிமன்றம் கூறியது.

    இதனைத்தொடர்ந்து, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடைசி எச்சரிக்கை வழங்கியது.

    மேலும் ஒரு வாரத்திற்குள் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

    பதஞ்சலி, மருத்துவ குணங்கள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    நவீன மருத்துவத்தை விமர்சித்த பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பதஞ்சலி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    பதஞ்சலி

    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்  பாபா ராம் தேவ்

    உச்ச நீதிமன்றம்

    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ஹேமந்த் சோரன்
    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு சண்டிகர்
    உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் உத்தரகாண்ட்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025