Page Loader
இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது
இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை-சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது

இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது

எழுதியவர் Nivetha P
Aug 03, 2023
05:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவத்துறையில் கடந்த சில நாட்களாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி உறுப்பு தானத்திலும், உடலுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான விழிப்புணர்வு உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நோட்டா என கூறப்படும் தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச்சிகிச்சை அமைப்பின் 13வது இந்திய உறுப்பு தானத்திற்கான தினம் இன்று(ஆகஸ்ட்.,3) அனுசரிக்கப்பட்டது. அதன் பேரில் இந்தியா முழுவதும் உறுப்பு தானத்திற்கான சிகிச்சைகள், அதற்கான விழிப்புணர்வுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் சிறந்து விளங்கும் தனி நபர்கள், அமைப்புகள், மாநிலங்கள் மற்றும் பலதரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் இந்தியளவில் உறுப்புத்தான திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடு மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விருது 

தமிழகத்தில் இன்று உறுப்பு தானம் என்பது ஓர் இயக்கமாக மாறியுள்ளது - மா.சுப்ரமணியம் 

தொடர்ந்து, சோட்டா என்னும் மாநில உடலுறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பின் விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக மக்கள் நலன் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து பெற்று கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 292 கொடையாளர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களின் அந்த உறுப்பு தானத்தின் பயன்பாடு 1,162ஆக உள்ளது. அப்படி பார்க்கையில், தமிழகத்தில் இன்று உறுப்பு தானம் என்பது ஓர் இயக்கமாக மாறியுள்ளது" என்று கூறியுள்ளார்.