NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை
    சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை

    சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் ஓர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு உள்ளது.

    அதில் ஈ-பிளாக் 8வது மாடியில் பால்றாஜ் என்பவர் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் குளியலறையில் நேற்று(மார்ச்.,21) காலை ஆந்தை ஒன்று இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

    அதனையடுத்து தனது வீட்டில் ஒரு ஆந்தை உள்ளது என்பது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறிய தகவலையடுத்து போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

    இது போன்று பறவைகள் மற்றும் ஏதேனும் விலங்குகளை பிடிக்க பெரும்பாலும் தீயணைப்பு துறையும், வனத்துறையினரும் தான் அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.

    நட்சத்திர ஆந்தை

    கிண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

    அதன்படி பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் இருந்து இவ்வாறு ஓர் குடியுருப்பில் ஆந்தை இருப்பது குறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்க தயாராகியுள்ளனர்.

    அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் பால்ராஜிடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

    அதன் பின்னர் அவர்கள் பால்றாஜ் வீட்டிற்குள் புகுந்து குளியலறையில் இருந்த ஆந்தையினை பிடித்துள்ளனர்.

    ஆந்தையை பிடித்த பின்னர் து ஆஸ்திரேலியாவில் உள்ள அரிய வகை ஆந்தை என்பது தெரியவந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த அரிய வகை ஆந்தை நட்சத்திர ஆந்தை என கூறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் பிடிபட்ட அந்த அரிய வகை ஆந்தையினை தீயணைப்பு வீரர்கள் கிண்டி வனத்துறையிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    சென்னை

    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது சமூக வலைத்தளம்
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலகம்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025