NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?
    எதிர்க்கட்சித் தலைவர்கள் 31 பேர் இன்று குர்டியரசு தலைவரை சந்தித்தனர்.

    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று(ஆகஸ்ட் 2) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர்.

    மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    எதிர்க்கட்சித் தலைவர்கள் 31 பேர் இன்று குர்டியரசு தலைவரை சந்தித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று காலை 11 மணிக்கு 31 எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    டக்க் 

    ஹரியானாவில் நிலவி வரும் பதட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சு 

    குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் சமர்ப்பித்த குறிப்பாணையில், தற்போது இனக்கலவரத்தால் ஹரியானாவில் நிலவி வரும் பதட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரதமர் அலுவலகத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் நடந்து கொண்டிருக்கும் ஹரியானா கலவரம் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மணிப்பூருக்குச் சென்ற எம்.பி.க்கள் அம்மாநிலத்தின் நிலைமையை குடியரசுத் தலைவருக்கு எடுத்துரைத்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர் என்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

    "மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக உரையாற்றுவதற்கு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், அதைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சி குழு குறிப்பாணையில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகள்
    திரௌபதி முர்மு
    மக்களவை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நாடாளுமன்றம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும் இந்தியா
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025