NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2023
    02:12 pm
    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
    பைலட்டின் குற்றச்சாட்டுகளை கெலாட் அரசாங்கம் மறுத்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று(ஏப் 11) ஜெய்ப்பூரில் தனது சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். நேற்றிரவு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த போராட்டம் "கட்சி விரோத நடவடிக்கையாக" பார்க்கப்படும் என்று கூறியதையும் மீறி, அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். இந்த போராட்டம் காங்கிரஸ் கட்சி தலைவரும் பைலட்டின் போட்டியாளருமான அசோக் கெலாட்டிற்கு எதிராக நடத்தப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு எதிராக முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த உண்ணாவிரதத்தை அவர் நடத்துகிறார். நேற்றிரவு, அரசாங்கத்திற்கு எதிராக உண்ணாவிரதத்தை நடத்துவது "கட்சி விரோத நடவடிக்கைக்கு" சமம் என்று காங்கிரஸ் கட்சி கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.

    2/2

    கட்சியின் முக்கிய முகம் யார் என்ற பிரச்சினை

    ராஜஸ்தானின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, பைலட்டின் உண்ணாவிரதம் கட்சியின் நலனுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு மத்தியில் அல்லாமல், கட்சி மன்றங்களில் இந்த பிரச்சினைகளை விவாதிக்கலாம் என்றும் அவர் கூறினார். பைலட்டின் குற்றச்சாட்டுகளை கெலாட் அரசாங்கம் மறுத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த போராட்டத்தைப் பைலட் நடத்துவது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. பைலட் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினாலும், தேர்தல் வரும் ஆண்டில் அவர் இப்படி செய்வது, கட்சியின் முக்கிய முகம் யார் என்ற பிரச்சினையைத் தீர்க்க காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் அவரது முயற்சியாகக் கருதப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ராஜஸ்தான்
    காங்கிரஸ்

    இந்தியா

    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  நேபாளம்
    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை
    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 5,676 கொரோனா பாதிப்பு: 21 பேர் உயிரிழப்பு கொரோனா

    ராஜஸ்தான்

    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு இந்தியா
    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி கொரோனா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ வைரல் செய்தி
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    காங்கிரஸ்

    பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பாஜக
    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் இந்தியா
    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் இந்தியா
    மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023