NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
    11வது நாள் விசாரணையின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 29, 2023
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35A பிரிவு, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான 11வது நாள் விசாரணையின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 2 முதல் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து வருகிறது.

    தலைமை நீதிபதியை தவிர, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, BR கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரும் இந்த அமர்வில் அடங்குவர்.

    டௌஹகிவ்ன்

    இது குறித்து நேற்று இந்திய தலைமை நீதிபதி கூறியதாவது:

    "சட்டப்பிரிவு-35Aஐ அறிமுகப்படுத்தும் போது, ​​நீங்கள் மூன்று அடிப்படை உரிமைகளை பறிக்கிறீர்கள். சட்டப்பிரிவு-16(1) மற்றும் சட்டப்பிரிவு-19(1)(f) வழங்கும் அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு-19(1)(a)க்கு கீழ் அடிப்படை உரிமையாக கருதப்படும், மாநிலத்தில் குடியேறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு-35A அமல்படுத்தியதன் மூலம் நீங்கள் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டீர்கள்." என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதுதவிர, நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2 முக்கிய கேள்விகளை மத்திய அரசிடம் எழுப்பினார்.

    "மனுதாரர்கள் வாதிட்டபடி, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது அதன் தரத்தை இறக்குகிறதா? இரண்டாவதாக, குடியரசு தலைவர் ஆட்சி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கலாம். அந்த 3 ஆண்டுகளைக் ஏற்கனவே நாம் கடந்துவிட்டோம், எனவே அதைத் தெளிவுபடுத்துங்கள்." என்று நீதிபதி கண்ணா கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு

    ஜம்மு காஷ்மீர்

    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு  ரிசர்வ் வங்கி
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை  தமிழ்நாடு

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025