NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
    இந்தியா

    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி

    எழுதியவர் Sindhuja SM
    August 29, 2023 | 10:29 am 1 நிமிட வாசிப்பு
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
    11வது நாள் விசாரணையின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35A பிரிவு, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான 11வது நாள் விசாரணையின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 2 முதல் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதியை தவிர, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, BR கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரும் இந்த அமர்வில் அடங்குவர்.

    இது குறித்து நேற்று இந்திய தலைமை நீதிபதி கூறியதாவது:

    "சட்டப்பிரிவு-35Aஐ அறிமுகப்படுத்தும் போது, ​​நீங்கள் மூன்று அடிப்படை உரிமைகளை பறிக்கிறீர்கள். சட்டப்பிரிவு-16(1) மற்றும் சட்டப்பிரிவு-19(1)(f) வழங்கும் அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு-19(1)(a)க்கு கீழ் அடிப்படை உரிமையாக கருதப்படும், மாநிலத்தில் குடியேறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு-35A அமல்படுத்தியதன் மூலம் நீங்கள் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டீர்கள்." என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதுதவிர, நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2 முக்கிய கேள்விகளை மத்திய அரசிடம் எழுப்பினார். "மனுதாரர்கள் வாதிட்டபடி, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது அதன் தரத்தை இறக்குகிறதா? இரண்டாவதாக, குடியரசு தலைவர் ஆட்சி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கலாம். அந்த 3 ஆண்டுகளைக் ஏற்கனவே நாம் கடந்துவிட்டோம், எனவே அதைத் தெளிவுபடுத்துங்கள்." என்று நீதிபதி கண்ணா கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜம்மு காஷ்மீர்
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  தீவிரவாதிகள்
    'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மெகபூபா முப்தி
    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  நிலநடுக்கம்
    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி  தீவிரவாதிகள்

    உச்ச நீதிமன்றம்

    ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு  சேலம்
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் குஜராத்
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு

    டி.ஒய்.சந்திரசூட்

    ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம்  ஹரியானா
    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மணிப்பூர்
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  பாஜக
    அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023