NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு 
    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு

    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு 

    எழுதியவர் Nivetha P
    Sep 15, 2023
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற முருகன், நளினி உள்ளிட்டோரை உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

    இவர்களுள் இலங்கை நாட்டினை தாயகமாக கொண்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேர் திருச்சியிலுள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் சேர்ந்து வசிக்க விரும்புவதால் தனது கணவர் முருகனை விடுவிக்க கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    பதில் மனு 

    வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலக மண்டப அதிகாரி பதில் மனு தாக்கல் 

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்பொழுது இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசு பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி தற்போது மத்திய அரசின் வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலக மண்டப அதிகாரி பதில் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் உள்ளிட்ட 4 பேரும் இலங்கை நாட்டினை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உரிய ஆவணம் ஏதுமின்றி கள்ளத்தோணியில் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்"என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர் அந்த மனுவில், "அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் இதர பயணத்திற்கான ஆவணங்களை அனுப்புமாறு இந்தியாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு கடந்த டிசம்பர் மாதமே கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. உரிய ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    மாநில அரசு
    உச்ச நீதிமன்றம்
    திருச்சி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய அரசு

    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் இந்தியா
    சரிவைச் சந்தித்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, புதிய அறிக்கை எலக்ட்ரிக் வாகனங்கள்
    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம் 2024 மக்களவை தேர்தல்
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீர்
    செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்  தமிழ்நாடு
    மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்  மணிப்பூர்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் தமிழ்நாடு
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் தமிழ்நாடு
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025