NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை
    குழந்தையின் பெற்றோர் தஸ்தகீர் - அஜிஸா

    கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை

    எழுதியவர் Sindhuja SM
    Aug 06, 2023
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கை அகற்றப்பட்ட குழந்தை, சூடோமோனஸ் என்ற பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தது என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது மஹீர்.

    1.5 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது.

    இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் போது அந்த குழந்தைக்கு 'ட்ரிப்ஸ்' போடபட்டதாகவும், அப்போது அந்த குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டு, கை அழுகியதாகவும் கூறப்படுகிறது.

    ஞ்கள்

    '7 துறைகளைச் சேர்ந்த மருத்துவர் குழு குழந்தையை கண்காணித்து வந்தது': தேரணிராஜன்

    இதனையடுத்து, கடந்த மாதம் அந்த குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது.

    இதற்கு, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    ஆனால், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் இதை முற்றிலுமாக மறுத்தார்.

    மேலும், இது மருத்துவர்கள் செய்த தவறினால் ஏற்படவில்லை என்றும், அரசு இதற்கு முழுமையாக ஒத்துழைத்து, தேவையான ஆதாரங்களை வழங்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருந்தார்.

    இதற்கிடையில், இன்று காலை, அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இது குறித்து இன்று விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் தேரணிராஜன், சூடோமோனஸ் பாக்டீரியா தொற்றினால் குழந்தை உயிரிழந்தது என்றும், எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யவும் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மருத்துவம்

    சமீபத்திய

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்? வேளாண்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் இந்த தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது சுபன்ஷு சுக்லா
    இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு இந்தியா

    சென்னை

    நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல்  விஜய்
    "அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்": ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்த விஜய் நடிகர் விஜய்
    சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும்  தமிழக அரசு

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025